Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Monday, December 20, 2010

பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள் - தொடர் பதிவு




முதன்முதலாக ஒரு தொடர் பதிவு எழுத போகிறேன், என்னை தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் அவர்களுக்கு நன்றி, பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள் என்றதும், இது என்ன பெரிய விஷயம் பத்து பாடல்களை தேர்வு செய்ய முடியாதா என நினைத்தேன், பிறகு கூகிளில் தேடிய போதுதான் தெரிந்தது, ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பாடல்கள் எனக்கு பிடித்த பாடலாக உள்ளது, இருந்தும் இதில் பத்து பாடல்கள் மனதிலேயே தேர்வு செய்யலாம் என பார்த்தால் அது அனைத்தும் இந்த வருடத்தில் வந்த பாடலாகவே உள்ளது, சரி இது எதுவும் வேலைக்காகாது, ஒவ்வொரு வருடமும் அந்தந்த கால கட்டங்களில் ஏதேனும் ஒரு பாடல் மிகவும் பிடித்திருக்கும், எனவே அந்த பாடல்களை மட்டும் எடுத்து போட்டிருக்கிறேன், பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

முதல்ல வர பாட்டு 2001 ஆம் வருஷத்துல வந்த துள்ளுவதோ இளமை படத்துல வர ’’இது காதலா முதல் காதலா பாட்டு’’, இது நம்ம தனுஷ் அறிமுகமான படம், இந்த படம் எவ்வளவு டெரரான படம்னு உங்க எல்லாருக்கும் தெரியும், அப்ப நான் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தேன், பசங்க எல்லாரும் காலேஜ் கட் அடிச்சிட்டு போய் பார்த்த படம், அது என்னவோ தெரியல இந்த பாட்டு ரொம்ப புடிச்சி போச்சு, மியூசிக் ரொம்ப நல்லா இருக்கும், தனுஷ் நல்லா டான்ஸ் ஆடிருப்பாரு, இது போக இந்த படத்துல வர்ர மத்த எல்லா பாட்டுமே பிடிக்கும்


அடுத்த பாட்டு 2002 ஆம் வருஷத்துல வந்த ஏப்ரல் மாதத்தில் படத்துல வர ’’பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, சொன்னால் பொய் பொய்தானே’’, இந்த பாட்டும் நான் முதல்ல சொன்னமாதிரியே லவ் பீலிங் பாட்டு, லவ் பண்ணிட்டு புரோபோஸ் பண்ணாதவங்க பீலிங் பாட்டு, யுவன் சங்கர் ராஜாவும் ரொம்ப பீல் பண்ணி பாடி இருப்பாரு, வித்தியாசமான மெலடி சாங்



அடுத்த பாட்டு 2003 ஆம் வருஷத்துல வந்த காக்க காக்க படத்துல வர ’’ஒன்றா இரண்டா ஆசைகள்’’ இந்த பாட்ட பத்தி சொல்லனும்னா பக்கா ரொமான்ஸ் சாங், ஆனா அவ்வளவு இதமா எடுத்திருப்பாங்க, பொதுவாவே கவுதம் மேனன் படத்துல ரொமான்ஸ் பாட்டு எல்லாம் சூப்பரா ரசிக்கிற மாதிரி பண்ணுவாரு, அதுவும் இந்த படத்துல நிஜ கணவன் மனைவி சொல்லவா வேணும், பின்னி இருப்பாங்க, பாடல் வரிகளும் ரொம்ப நல்லா இருக்கும், மியூசிக் மெல்லமா மனதை வருடிட்டு போகும், பாட்டு முடியும் போது அந்த இசை ஸ்லோவா பின்னாடி போகும் போது அப்படியே கேமராவும் ரூமை விட்டு வெளியே போற மாதிரி எடுத்திருப்பாங்க, உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்





அடுத்த பாட்டு 2004 ஆம் வருஷத்து பாட்டு, விருமாண்டி படத்துல வர ’’உன்னை விட இந்த உலகத்தில ஒசந்தது ஒண்ணுமில்லை’’ இந்த பாட்டு இன்னொரு வகையான ரொமான்ச் பாட்டு முன்னது நகரம்னா இது கிராமத்து ரொமான்ஸ், அதுவும் கமல் வேற சொல்லவா வேணும், அபிராமி ஒரு வழி ஆகி இருப்பாங்க, ரொம்ப இதமான மெலடி இளையராஜா இசையில கமலோட குரல்ல மனசை என்னமோ பண்ணும், முழுசா பீல் பண்ணி கேட்டீங்கன்னா உங்க பொண்டாட்டிய கொஞ்சாம இருக்க முடியாது, பாட்டு வரிகளும் அற்புதமா இருக்கும், கண்டிப்பா கேளுங்க லவ் + ரொமான்ஸ் பாட்டு



அடுத்து வர பாட்டு 20005 ஆம் வருசத்துல தலைவர் நடிச்ச சந்திரமுகி படத்துல வர ’’கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் பாட்டு’’, இது ரஜினி படம்கறதுக்காக சொல்லல, அருமையான மெலடி சாங், வித்தியாசாகர் இசையில சின்னதா ரஜினி ஸ்டைலோட அமைஞ்ச நல்ல பாடல், இதுக்கு மேல விரிவா சொல்ல முடியாது, பதிவோட நிபந்தனைய மனசில வச்சு இதோட நிறுத்திக்கிறேன், கடைசியா நயன்தாராவ நயன்தாரா மாதிரியே பார்த்த பாட்டு, அதாவது இளமையோட பார்த்த பாட்டு.



அடுத்து 2006 ஆம் வருஷம் வந்த சில்லுனு ஒரு காதல் படத்துல வர ’’முன்பே வா அன்பே வா’’ இந்த பாட்ட புடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது, ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு மேல சலிக்காம கேட்ட பாட்டு, இப்பவும் எப்ப டிவில இந்த பாட்ட போட்டாலும் நின்னு கேட்டுட்டுதான் போவேன், அப்ப நான் லவ் பண்ணிட்டு இருந்த நேரம் பீல் பண்ண வச்ச பாட்டு, இதுல சூரியாவும், பூமிகாவும் போட்டுட்டு வர ரோஸ் கலர் சுடிதாரும், பச்சை கலர் டி சர்ட்டும் போட்ட காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கும், பாட்டு வரிகளும் அதவிட ரொம்ப சூப்பரா இருக்கும்



அடுத்து 2007 ஆம் வருஷத்துல வெளிவந்த சென்னை -28 படத்துல வர ’’யாரோ யாருக்குள் இங்கு யாரோ’’ பாட்டு பாடும் நிலா பாலு பாடுனதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பாடுகளில்ல இதுவும் ஒன்னு, பாட்டோட மியூசிக் ரொம்ப நல்லா இருக்கும், யுவன் பின்னி எடுத்து இருப்பாரு, சினிமா காதலர்கள் இல்லாம சாதாரணமா ந்டைமுறை வாழ்க்கையில காதலர்கள் என்ன பண்ணுவாங்கங்கறத பாட்டுல நல்லா காமிச்சிருப்பாங்க, பூ வாங்கி கொடுக்குறது, ஐஸ்கிரீம் சாப்பிடுரது, தலையில முக்காடு போட்டுட்டு வண்டில போகுறது, கிரீட்டிங் கார்டு கொடுக்கறது இப்படின்னு, ரொம்ப நல்லா இருக்கும் இந்த பாட்டு.



அடுத்து 2008 ஆம் வருஷத்துல வெளிவந்த நேபாளி படத்துல வந்த ’’கனவிலே கனவிலே’’ பாட்டு, பரத்தும் மீரா ஜாஸ்மினும் நடிச்சது, ஊட்டில இந்த பாட்ட எடுத்து இருப்பாங்க, எங்க ஊருல இருந்து ஊட்டி பக்கம்கறதால நாங்க பிரண்ட்ஸ்சோட பைக்ல போகும் போதொல்லாம், அந்த கிளைமேட்ல இந்த பாட்ட நினைக்கும் போதே லவ் பீலிங் வரும், கண்ண மூடிட்டு கேட்டா இதமான அனுபவத்தை கொடுக்கும், பொதுவா பார்த்தா அவ்வளவா இம்ப்ரஸ் பண்ணாது, கண்டிப்பா தனிமையில கேட்டு பாருங்க கண்டிப்பா ரசிப்பீங்க



அடுத்து 2009 ஆம் வருசத்துல வந்த குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்துல இருந்து ’’கடலோரம் ஒரு ஊரு’’, நம்ம ஊருல நிறைய நல்ல பாடல்கள படம் நல்லா இல்லைங்கற காரணத்தால கவனிக்காம விட்டுடுவாங்க, அப்படி விட்டு போன ஒரு பாட்டுதான் இது, சரண் அவங்க அப்பா மாதிரியே பாட முயற்சி பண்ணி இருப்பாரு, முன்பே வாவுக்கு அப்புறம் என்னோட ஆல்டைம் பேவரைட் இந்த பாட்டு அப்படியே மெதுவா கிளம்பி உள்ளுக்குள்ள வரைக்கும் போகும், அமைதியா இருக்குற இடத்துல இந்த பாட்ட போட்டு கவனிச்சி பாருங்க நான் சொன்னது புரியும், ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல அமைதியான மெலடி சாங், பாடல் வரிகளும் நல்லா இருக்கும்.




கடைசியா 2010, இதுலதான் பெரிய குழப்பமா இருக்கு, நிறைய பாட்டு இந்த வருசத்துல நல்லா இருக்கு, எந்த பாட்ட சொல்றது, எத விடறதுன்னு பெரிய குழப்பாமாவே இருக்கு, இருந்தாலும் இது எல்லாத்துலயும் பெஸ்ட்டா எனக்கு தோனறது அங்காடி தெரு படத்துல வர இந்த பாடல்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம், உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
நீ பார்க்கும் போதோ மழையாவேன்,
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்,
நீ இல்லை என்றால் என்னாவேன்,
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்.
இந்த பாட்ட பத்தி நான் என்ன சொல்றது, அதான் பாடல் வரிகளே சொல்லுதே, நீங்களும் கேளுங்க. 


இந்த பதிவ தொடர நான் அழைப்பது உங்களைத்தான், அட பின்னாடி திரும்பி பார்க்காதீங்க சத்தியமா உங்களைத்தான், உங்களுக்கும் ஏதாச்சும் பத்து பாடல்கள் பிடிக்காம இருக்குமா என்ன, பிடிச்சத பகிர்ந்துக்கோங்க, இந்த தொடர் பதிவோட ரூல்ஸ் அண்டு ரெகுலேசனஸ் எல்லாம் நண்பர் எப்பூடி அவர்களோட இந்த பதிவில போய் பார்த்துக்கோங்க, எத்தனை பேரு பகிர்ந்துக்கறீங்களோ அந்தளவுக்கு நாம மறந்து போன பாடல்கள திரும்பி பார்க்க ஒரு சந்தர்ப்பமா அமையும், அது உங்களோட மறந்து போன பிளாஸ்பேக்க கிளறி விட கூட வாய்ப்பு இருக்கு, என்ன மாதிரி, என்னோட இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு ஒரு பின்னூட்டம் மூலம் தெரிவிச்சுட்டு போங்களேன், நன்றி - இரவுவானம்





Saturday, December 11, 2010

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



டிசம்பர் 12 நாளை ஞாயிற்றுகிழமை நம்ம தலைவருக்கு பிறந்தநாள், அவர வாழ்த்தற அளவுக்கு எனக்கு வயசும் இல்ல, தகுதியும் இல்ல, இருந்தாலும் அவரு நல்லா இருக்கணும்னு இறைவனை வேண்டிக்கிறேன், தலைவர பத்தி அப்படி இப்படின்னு கண்ட மேனிக்கு பல விமர்சனம் இருந்தாலும், மத்தவங்க ஒவ்வொரு தடவை விமர்சனம் பண்ணும்போது தலைவர் மேல ஈர்ப்பு கூடிக்கிட்டேதான் போகுது, குறைய மாட்டேங்குது, ஒருவிதத்துல எதிர்விமர்சனம் பண்ணரவங்கள பாராட்டத்தான் வேணும், இவங்க நேரத்த செலவு பண்ணி இவங்களே விளம்பரப்படுத்தறாங்க, நல்லா இருங்க,



அதனால இந்த நேரத்துல தலைவர பத்தி எழுத நிறைய விஷயம் இருந்தாலும் எனக்கு பிடிச்ச தலைவரோட பாடல் 5 மட்டும் எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டேன், என்னோட ரசனை எப்படின்னா கன்னா பின்னான்னு இருக்கும், இதுதான் பிடிக்கும்கறது எல்லாம் கிடையாது, இருந்தாலும் மெலோடி சாங்கா பார்த்தா கீழ இருக்கற அஞ்சு பாட்டு ரொம்ப புடிக்கும்,




முதல் பாட்டு மன்னன் படத்துல வர்ர ’’அம்மா என்றழைக்காத உயிரில்லையே’’ ஜேசுதாஸ் பாடினதுல இந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும், எனக்கு அம்மா செண்டிமெண்ட் ரொம்ப ஜாஸ்தி, இப்ப எஙக அம்மா இல்லாத நிலையில இந்த பாட்ட எப்ப பார்த்தாலும் கண்ணுல தண்ணி வந்துடும், இந்த பாட்டுல சூப்பர்ஸ்டார் அம்மாவுக்கு உடம்பு சரியாகனும்கறதுக்காக வேண்டிக்கிற பாடல், உண்மையிலேயே ஒருத்தரோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போனா மனசு என்ன பாடுபடும்கறத கண்ணுலெயே காமிச்சி இருப்பாரு, அதிலயும் பண்டரிபாய் அம்மா கைகால் வராதவங்களா இருந்த இடத்துலயே இருபாங்க, அப்ப தலைவர் ஊனமுற்றவர்கள் போறதுக்கான வண்டி ஒன்னு வாங்கிட்டு வருவாரு, அம்மா நீங்க இனிமேல் இப்படியே உட்கார்ந்து இருக்க வேணாம் நீங்க எங்க வேணா போகலாம்னு சொல்லிட்டு அந்த சக்கர நாற்காலியில உட்காரவெச்சி வீடு முழுக்க தள்ளிகிட்டு போவாரு, அதுவும் அவங்க மனசு சங்கடப்படகூடாதுன்னு சிரிச்சிகிட்டே தள்ளிட்டு போவாரு, ஒரு கட்டத்துல தாங்க முடியாம அழுவாரு, நல்ல நெகிழ்ச்சியான சீன் அது, உண்மையில இந்த பாட்டுக்கு ரஜினிகாந்த விட வேற யாராலும் சிறப்பா நடிச்சி இருக்க முடியாது, நானும் இந்த பாட்டுக்கு கமலோ, சிவாஜி சாரோ நடிச்சி இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன், கண்டிப்பா நல்லா இருக்காதுன்னுதான் தோணுது, இந்த பாட்ட புடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது, நீங்களும் ஒருதடவை கேட்டு பாருங்க, பாடல் வரிகளும் நல்லா இருக்கும்.

‘’ பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே ‘’





ரெண்டாவது பாட்டு வீரா படத்துல வர ‘’ மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே ‘’ இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்ச படம், இந்த பாட்ட எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது, இதுல தலைவர் மீனாவ கரக்ட் பண்ண டிரை பண்ணுவாரு, அத கேட்ட மீனா எங்கப்பா இதுவரைக்கும் யாருக்கும் சங்கீதம் கத்துதர ஒத்துக்கிட்டதில்லை, உங்கள நம்பி இருக்காரு, நீங்க உண்மையான மனுசனா இருந்தா இந்த ஒருமாசம் சங்கீதம் கத்துகிட்டு போயிருங்க, என் முகத்துல முழிக்காதீங்கன்னு சொல்லிடுவாங்க, தலைவரும் அது மாதிரியே ஒருமாசம் சங்கீதம் கத்துகிட்டு கடைசியில நான் உங்கள லவ் பண்றேன், நீங்களும் என்னை லவ் பண்ணீங்கண்னா நாளைக்கு மலைகோயில்ல ஒரு கார்த்திகை தீபம் ஏத்தி வையுங்க, தீபம் இருந்ததுன்னா நான் அதிர்ஷ்ட சாலி இல்லைன்னா பரவாயில்லைன்னு சொல்லுவாரு, அதுமாதிரி அடுத்தநாள் போய் பார்க்கும்போது தீபம் இருக்காது, சரி நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவுதான் அப்படின்னு நினைச்சி திரும்பி பார்க்கும் போது மீனா முத்துங்கற பேரயே தீபமா வச்சிருப்பாங்க, அப்படியே பாட்டு தொடங்கும், சூப்பரான லவ் பீலிங் பாட்டு, இதுல தலைவர் போட்டுட்டு வர கருப்பு டிரஸ் எனக்கு ரொம்ப புடிக்கும், இந்த பாட்டு போக இந்த படத்துல வர்ர, அடி பந்தலிலே தொங்குகிற புடலங்காய் மற்றும் ஆத்துல அன்னக்கிளிங்கற பாட்டும் ஆல்டைம் பேவரிட், நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்க





மூனாவது பாட்டு பாண்டியன் படத்துல வர ‘’அன்பே நீ என்ன அந்த மன்னனோ ‘’ இந்த பாட்டு முழுக்க பெண்குரல்ல தான் வரும், கடைசி இரண்டு வரி மட்டும் ஆண்குரல்ல வரும், மியூசிக் ரொம்ப நல்லா இருக்கும், இந்த பாட்ட தலைவருக்காக மட்டுமில்ல குஷ்புவுக்காகவும் ரொம்ப புடிக்கும் ஹி ஹி ஹி




நாலாவது பாட்டு தளபதி படத்துல வர ‘’ சுந்தரி கண்ணால் ஒரு சேதி ‘’ இந்த பாட்டு புடிக்க காரணம் தேவையில்லை, எல்லாருக்கும் புடிச்ச பாட்டுதான், ஆனாலும் இந்த பாட்ட ஒருதடவை கேட்டா அரைமணி நேரம் மனசுல தங்கும், சம்திங் ஸ்பெஷல் இந்த பாட்டுல இருக்கு, என்னன்னுதான் தெரியல, தலைவர் இந்த படத்துல ரொம்ப இளமையா இருப்பாரு, சோபனாவும் சூப்பரா இருப்பாங்க





அஞ்சாவது பாட்டு தர்மதுரை படத்துல வர ‘’ மாசி மாசம் ஆளான பொண்ணு ‘’
தலைவர் படத்துலயே இந்த பாட்டு ஒன்னுதான் ஒரு மார்க்கமா இருக்கும், பொதுவுல வச்சி கேட்க முடியாது, ஆனாலும் ஜேசுதாஸ்குரல்ல ரொம்ப சூப்பரான பாட்டு, நிறைய பேருக்கு புடிக்கும்னு நினைக்கிறேன், அந்த காலத்துலேயே ஒரு கிளுகிளுப்பான பாடல், ஆனா மியூசிக் நல்லா இருக்கும், இந்த பாட்ட லாரண்ஸ் ரீமிக்ஸ் பண்ணி கெடுத்துட்டாரு.

இது போக இன்னும் நிறைய பாட்டு இருக்கு ஆனா அத எல்லாம் எழுதிகிட்டே போனா பதிவு பெரிசாகிரும், நாலுபத்தி தாண்டுனாலே படிக்க யாருக்கும் நேரம் இருக்கறதில்லை, இதில நானும் எழுதிகிட்டே போனா எல்லாரும் ஓடி போயிருவாங்க, இனிமே இரண்டு வரி பதிவு, நாலு வரி பதிவுன்னுதான் எழுதணும், அதனால நானும் இத்தோட நிறுத்திக்கிறேன்.



தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகனாக என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்த இனிய நாளில் எல்லா வளமும் பெற்று, சந்தோசத்தோடும், மனநிறைவோடும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.


[ இந்த பதிவில் இருந்து அடுத்து என்ன பதிவு எழுத போரேன்ங்கறத பிளாக்கோட வலது பக்கம் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன், இதுவும் சினிமா தியேட்டர் மாதிரிதான், சப்போஸ் எழுத ஒன்னும் தோணலின்னா UNDER CONSTRUCTION  அப்படின்னு போடுவேன், அதனால என்னுடைய வாசக பெருமக்கள் (?) அப்படின்னு யாராவது இருந்தா அதபாத்து தெரிஞ்சுக்கோங்க, இப்ப அடுத்து என்னன்னு தெரியணும்னா பிளாக்கோட வலது பக்கம் மேல பாருங்க ]