Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Wednesday, August 22, 2012

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விண்ணப்பம் ..!


அன்புள்ள வலையுலக அன்பர்களுக்கு
சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், படித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

ஹாய் சுரேஷ் அண்ணா,
உங்கள் வலைப்பூவை பார்த்து படித்து உங்களிடம் எனது எண்ணங்கலை பகர்ந்து கொள்ள விரும்புகிறேன் .நான் திருப்பூரில் வசிக்கிறேன் எனது பெயர் கி.லோஹித் குமார் வயது 19 . என் அப்பா கிருஷ்னராஜ் அம்மா தனலக்ஷ்மி. நான் 10 வகுப்பு வரை திருப்பூர் சுப்பையா பள்ளியில்படித்தேன்.கல்வி மேம்பாட்டுக்காக நான் ஈங்கூரில் உள்ள கங்கா பள்ளி விடுதியல் +1 வகுப்பில் 2008 ஆம்ஆண்டு சேர்ந்து படித்துகொண்டு இருந்தேன். +1 முடித்து +2 வில் வகுப்பில் முதல் மாணவனாக படித்தேன். தவிர,நான் மாவட்ட அளவில் கைபந்துவீரன்.அது சமயம் 20 .10 .2009 அன்று எனதுஉடல் நிலை சரி இல்லாமல் இருந்த்தது பள்ளி விடுதி காப்பாளர்களின் கவனக்குறைவினால் நான் தனியாக உணவு உண்டு விட்டு வரும்போது திடிரென்று மயக்கம் வந்து படியில் மேல்பகுதியல் இருந்து கீழ்பகுதியல் விழுந்ததில் எனது வாழ்கையே மாறிவிட்டது.


காரணம்,விடுதிகாப்பாளர்களின் கவனக்குறைவு அலட்சியம் எனக்கு அன்று காலை முதல் உடல்நிலை சரீல்ல அதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டு இருந்தால் எனக்கு எந்த நிலை ஏற்பட்டு இருக்காது.சுமார் 2 ஆண்டுக்கு மேலாக படுக்கையில் இருக்கிறேன் இன்று நான் மற்றவர் உதவி நாடி உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.எனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரகூடாது ஓவ்வொரு பள்ளிஇயலும்stretcherஅவசியம்வைத்து இருக்கவேண்டும்.இனிமேலும் பள்ளிகளில் எந்த மாணவன் விழுந்தாலும் stretcher மட்டுமே படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் நான் படும் துன்பம் இனி எந்த உயர்களும் படகூடாது இதற்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

இதனால் நான் படிப்பை இடையில் விட்டபோதும் 2 ஆண்டுகள் கழித்து +2 தேர்வை உதவியாளரோடு எழுதி 953 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தேன். இன்றுவரை என் பெற்றோர்கள் செய்யும் மருத்துவ செலவுகள் அனைத்தும் அவர்கள் வருமானத்துக்கு உட்பட்டு செய்கிறார்கள் அப்படி முடியாதவகையில்செலவு வரும்போது நண்பர்கள் நன்கொடை மூலம் உதவி செய்கிறார்கள். இதுவே எனது என்றைய நிலைமை. நான் விரைவில் எழுந்து நடமாடவேண்டும நமது வலை முலம் வலைபூமூலம் அனைவரும்ஆண்டவனை பிராத்திக்கவேண்டுகிறேன்.நான் எப்பொழுது எழுந்து நடப்பேன் இதற்க்கு யார் பொறுப்பு ?.....பள்ளி நிர்வாகமா? விடுதி காப்பாளரா? என் பெற்றோரா? உங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்.
நன்றி
கே.லோஹித் குமார்.


மின்னஞ்சலை படித்து முடித்ததும் மனதுக்குள் ஏதோவொரு கனம் ஏறிக்கொண்டது, பெரும்பாலான விபத்துக்களில் உயிரிழப்பு, உடல் அவயங்கள் இழப்பு நேரிடுவது என்பது சரியான நேரங்களில் கொண்டு செல்ல தவறுவது, அல்லது சரியான முறையினில் கொண்டு செல்ல தவறுவது போன்ற காரணங்களாலே நடக்கிறது, லோஹித்தை பொறுத்தவரை கழுத்தெலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது, அதனையறியாமல் அல்லது சரியான முறையில் கையாள தெரியாமல் பள்ளி நிர்வாகம் கொண்டு சென்றதே அந்த தம்பியின் இப்பொழுதைய நிலைக்கு காரணம், இந்நிலை மேற்கொண்டு எந்த மாணவருக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்வது பள்ளிகள், மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு, ஒவ்வொரு உயிரிழப்பு நேரிடும் போதும், ஆறுதல் சொல்வதும், நிவாரணம் அழிப்பதும், பேருக்கு ஒரு நடவடிக்கை எடுப்பதும் சரியாக இருக்காது.

வரும்முன் காப்பதே சிறந்தது என்னும் பழமொழிக்கெற்ப ஒவ்வொரு பள்ளியும், தன்னுடைய பள்ளிகளில் அவசரகால வெளியேற்றும் வழிகள், தீ தடுக்கும் கருவிகள், அதனை செயல்படுத்தும் வழிமுறைகள், அடிபட்டால் கொடுக்க வேண்டிய முதலுதவி பயிற்சிகள் பெற்றவர்கள், ஸ்டெரெச்சர்கள், மருத்துவ செவிலியர்கள், அதிகம் பேர் படிக்கும் பள்ளிகளில் குறைந்த பட்சம் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ், நீச்சல் பயிற்சி அளிக்கும் குளங்களில் தகுந்த கண்காணிப்பாளர்கள், சரியான முறையில் பராமரிக்கப்படும் பேருந்துகள், தகுந்த அனுபவமுள்ள டிரைவர்கள் என சகலமும் செய்து தர வேண்டும், அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், இதனை தொடர்ச்சியாக அரசாங்கமும், தன்னார்வலர்களும் கண்காணிக்க வேண்டும், அப்படிப்பட்ட நிலைமை வந்தாலொழிய இது போன்ற விபத்துகளும், இன்னொரு லோஹித்குமாரும் உருவாகாமல் தடுக்கும். இது நடக்குமா? அரசாங்கம் விழிக்குமா

 லோஹித்குமாரின் தற்போதைய நிலை :-       


வணக்கம்  உமது பதில் மடலை பார்த்து மகிழ்ந்தோம்.நான் லோஹித் அம்மா கி.தனலட்சுமி,லோஹித் கீழே விழுந்து  கழுத்து எலும்பு c5 ஐல்  fracture  ஏற்பட்டு அதனை ஆபரேஷன் செய்து சரி செய்து விட்டோம் நரம்புகளில் பாதிப்பு ஏற்ப்பட்டதால் இன்னும் நடக்க, உட்காரக்கூடமுடியாது.தவிர அவனுக்கு மார்பில் இருந்து பாதம்வரை எந்த உணர்வும்  இல்லை.  அவன் தன்னுடைய தேவைகள் எதுவும் செய்ய முடியாது.ஒரு வாய் தண்ணீர் கூட நாம்தான் கொடுக்க வேண்டும்.உணர்வு இல்லாமல் இருப்பதால் அவனால் திரும்பிகூட படுக்க முடியாது.2 மணி நேரத்துக்கு ஒருமுறை பக்கம் மாற்றி படுக்கவைக்க வேண்டும்.இரவு பகல் எல்லா நேரமும் எப்படி மாற்றி படுக்கவைக்க வேண்டும்.உணர்வு இல்லாமல் இருப்பதால் உடம்பில் படுக்கைபுண் வராமல் இருக்க இப்படி செய்வது  அவசியம். physio therapy  treatment  மூலம் குணமாகும் என்று  2 வருடங்கள்  hospital இல் வைத்து பார்த்தோம் பலன் ஏதும் இல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டோம்.தற்போது ஆயுர்வேதம் சிகிச்சை  செய்தவருகிறோம்

                   

முன்பைவிட சிறிது தேவலாம்.மாதம் ரூபாய் 3500 செலவாகிறது. உங்கள் அன்பின் மூலம் அன்பர்கள் யாரேனும் உதவினால் நாங்கள் நன்றிகடன்பட்டவராக  இருப்போம்.அவனை சரியான முறையல் hospital  கொண்டு சென்று இருந்தால் இவளோ பாதிப்பு ஏற்பட்டு இருக்காது நாங்கள் திருப்பூர் பாண்டியன் நகர் அருகில் இருக்கும் இந்திரா நகரில் வசிக்கறோம். நீங்கள் லோஹித் பார்க்க விரும்பினால் வரலாம்.லோஹித் கைபேசி 9003504843 எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.

இதனை தொடர்ந்து நானும், வீடு சுரேஷ்குமார் அவர்களும் லோஹித்தை அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்தோம், இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் படுத்த படுக்கையாக இருந்தாலும் பட்டப்படிப்பினை தொலைதூர கல்வியின் மூலமாக படித்து வருகிறார், வீட்டில் இருந்தபடியே எதாவது வேலை செய்ய வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறார்.

லோஹித்தின் ஒவ்வொரு அசைவிற்கும் யாராவது ஒருவரின் உதவி தேவை என்பதால் அவரது தந்தை கிருஷ்ணராஜ் அவர்களும், தாயார் தனலட்சுமி அவர்களும் அருகிலிருந்தே பார்த்துக் கொள்கிறார்கள், தொலைவில் வேலைக்கு சென்றால்கூட சிரமம் என்பதால் கிருஷ்ணராஜ் அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே குறைந்த ஊதியம் என்றாலும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது,

பல லட்ச ரூபாய்கள் தாண்டிய மருத்துவ செலவு, எப்பொழுது மகன் குணமாவான் என்பது தெரியாத நிலை, வீட்டுசெலவிற்கே வருமானம் சரியாக இருக்கும் நிலையில் மாதம் 3500 ரூபாய் அளவிற்கு ஆகும் மருந்து செலவு என திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், உதவும் நல்ல உள்ளங்களின் கருணையால் மட்டுமே தற்பொழுது மருத்துவ செலவினை சமாளித்து வருகிறார்கள்.

எனவே இப்பதிவினை படிக்கும் வலையுலக அன்பர்கள் திரு. லோஹித்குமார் அவர்கள் உடல்நிலை சரியாகவும், எழுந்து நடக்கவும் பிரார்த்தனை செய்யுமாறும், உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு உதவலாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்,

மேலதில முழு விபரங்களுக்கு இதனை கிளிக்கி படித்து பார்க்கவும்


முகவரி

Mr. K. LOHITH KUMAR
S/O S. KRISHNA RAJ
12, SV COLONY LANE VEEDHI
P.N. ROAD
TIRUPUR - 641602
PH. NO :- 98434 88028, 99942 55262, 90035 04843

BANK DETAILS

STATE BANK OF INDIA
BAZZAR BRANCH
TIRUPUR
S/B ACCOUNT NO : 30893697770
IFSC : SBIN0008677

லோஹித்குமாரை பார்க்க விரும்புகிறவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நேரில் சென்று காணலாம், லோஹித்தை தொடர்பு கொள்ள மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், உங்களுக்கு தெரிந்த உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல் இருந்தால் தயவுசெய்து பகிரவும், வீட்டில் இருந்தபடியே செய்யும் தொழில் பற்றிய தகவல் இருந்தாலும் பகிரவும், நன்றி.

டிஸ்கி :- சம்பவம் நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்னமும் லோஹித்குமார் படித்த ஈங்கூர் பள்ளியில் ஸ்ட்ரெச்சர் வசதி செய்யபடவில்லையாம், தன்னுடைய பள்ளியில் படித்த ஒரு மாணவனின் தற்போதைய நிலையை உணர்ந்தும், பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பாதுகாப்பிற்காக கவலைப்படாத இது போன்ற பள்ளிகள் இருக்கும் வரை எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு சென்ற மகன் அல்லது மகள் பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என வீட்டில் உட்கார்ந்திருக்க முடியும்?


Tuesday, July 10, 2012

கையில் பல கோடி ! ஏமாற ஆர் யூ ரெடி ?


சமீபத்துல அண்ணன் ஒருத்தரு போன் பண்ணி சாயங்காலம் வீட்டுக்கு வா, ரொம்ப முக்கியமான விசயம், கண்டிப்பா வந்துடுன்னு போன் பண்ணுனார், சரின்னு நானும் கிளம்பி அவர் வீட்டுக்கு போனேன், என்னை பாத்ததும் டக்குன்னு சிறை நிரப்பும் போராட்டத்திற்கு போய் ஜெயிலுக்கு போகாம எஸ்கேப் ஆன உடன்பிறப்பு கணக்கா வா அந்தபக்கம் போயிடுவோம்னு ரகசியமா கூட்டிட்டு போனாரு, ஓ பயங்கர ரகசியம் போலருக்கேன்னு நானும் சைலண்டா போனேன்.

தனியா ஒரு இடத்துக்கு போய் நின்னவரு, டேய் உன்கிட்ட ஒரு விசயம் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லக்கூடாது, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னாரு, சரின்னா என்ன விசயம்னு சொல்லுங்க, யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சொன்னேன், இரண்டு மூணுதடவை சத்தியம் மேட்டர ரீபிட் பண்ணி கன்பர்மேசன் பண்ணிகிட்டு விசயத்தை சொன்னாரு மனுசன், ச்சீன்னு போயிடுச்சு.

வேற ஒன்னும் இல்லீங்க, இவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்கு இவரோட நம்பருக்கு ஏழுகோடி ரூபா பரிசு விழுந்திருக்கறதா, அதுக்கு வீட்டு அட்ரஸ், போன் நம்பர், எல்லாம் மெயில் பண்ண சொல்லி எஸ்.எம்.எஸ் பண்ணி இருக்காங்க, அதைத்தான் உண்மைன்னு நம்பி என்ன மெயில் பண்ண சொல்லி கேட்கறதுக்காக கூப்பிட்டு இருந்தாரு, நானும் அண்ணா இது எல்லாம் சும்மா, டுபாகூரு மேட்டரு, இதையெல்லாம் பெருசா நினைக்காம விட்டுடுங்கன்னு சொன்னா ஆளு கேட்கவே இல்லை, டேய் நோக்கியா கம்பெனில இருந்து மெசேஜ் அனுப்பி இருக்காங்கடா? ஒருவேளை நிசமா இருந்தா ஏழு கோடிடா மெயில் அனுப்புடான்னு ஒரே தொல்லை.


நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன் அண்ணன் கேட்கற மாதிரி இல்லை, சரி அனுப்பித்தான் தொலைவோம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு எஸ்.எம்.எஸ் வாங்கி பாத்தா MDNOKIA@GMAIL.COM அப்படிங்கற மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லி இருந்தது, அடப்பாவி நோக்கியா கம்பெனி எம்,டிக்கு சொந்தமா ஒரு டொமைன் வாங்கக்கூடவா காசிருக்காது, ஜிமெயில் ஐடிய வச்சிருக்கானே? 1100 மாடல்லயே 2ஜி அளவுக்கு சம்பாதிச்சிருப்பானேன்னு இதையும் சொன்னேன், எங்கண்ணந்தான் அடைந்தால் ஏழுகோடி இல்லையேல் தெருக்கோடின்னு உறுதியா நின்னதால வேற வழி இல்லாம இதுக்குன்னே ஒரு மெயில் ஐடிய ஓப்பன் பண்ணி பேரு, அட்ரஸ், போன் நம்பருன்னு எல்லாத்தையும் அனுப்பி வச்சேன்.

எவண்டா சிக்குவான்னு போர்வைய போத்திட்டு காத்திகிட்டு இருக்கானுகளே கம்முனாட்டி பசங்க மெயில் அனுப்புன ஒருமணி நேரத்துல ரிப்ளை வந்திருச்சு, அது என்னன்னா, இந்தமாதிரி ஏழுகோடியே நாற்பது லட்சம் ரூபா பரிசுத்தொகை உங்களுக்கு விழுந்திருக்கு, அதுக்கு வாழ்த்துக்கள், அப்புறம் இந்த பணம் உங்க கைக்கு கிடைக்கற வரைக்கும் யாருகிட்டயும் சொல்லக்கூடாது, ஏன்னா சட்டசிக்கல் வந்துரும், டேக்ஸ் கட்ட சொல்லுவாங்க, பணத்த நாளைக்கு விமானத்துல அனுப்பி வைக்கிறோம், எங்க ஆபீசரு ஜேக்கப் ஆண்டர்சன் கூடவே வருவாரு, உங்களோட கிப்ட் பாக்ச கஸ்டம்சுல இருந்து ஈசியா வாங்கித்தருவாரு, அப்படி இப்படின்னு, கடைசியா மேட்டருக்கு வந்தானுக அதாவது உங்களோட ஐடி, ப்ரூப் ஒன்னும், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் சார்ஜ் 15500 ரூபாயும் கொண்டு வாங்கன்னு.

[ அந்த மெயில்ல வந்திருந்தது கீழ இருக்கற டாக்குமெண்ட்ஸ்தான்]


நானும் உடனடியா ரிப்ளை எதுவும் பண்ணாம ஒரு ரெண்டுநாள் சும்மா விட்டுட்டேன், அடுத்தடுத்த நாள் மெயில் அனுப்பிட்டே இருந்தானுக, நாளைக்கு ப்ளைட் லேண்டிங் லேண்டிங்னு நான் ரிப்ளையே அனுப்பல, அண்ணன் வீட்டு பக்கமும் போகல, சரின்னு மூணாவது நாள் இதையெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு அண்ணன் வீட்டுக்கு போனா அவனுங்க அடுத்தநாளே போன் பண்ணி பேசியிருக்கானுக, 15500 ரூபாய் அமவுண்டை நாங்க சொல்ர அக்கவுண்ட் நம்பர்ல போடுங்கன்னு

நம்ம அண்ணன் ஏற்கனவே வயித்துக்கு கஞ்சி வாய்க்கு பீடின்னு வாழுற ஆளு, என்கிட்ட முன்னூரு ரூபாதான் இருக்குது, சனிக்கிழமை சம்பளம் வாங்குனா ஆயிரம் கிடைக்கும் மொத்தமா 1300 இப்ப வச்சுக்கங்க, அப்புறம் ஏழுகோடி கிடைச்சதும் மீதிய கொடுத்துடறேன்னு சொல்லி இருக்காரு, அவனுங்க அதெல்லாம் முடியாது மொத்தமா 15500 வேணும் இல்லைன்னா பணம் கிடைக்காதுன்னு சொல்லிட்டானுக

இப்படியே அடுத்தநாளும் போன் பண்ணி இருக்கானுக, நம்மண்ணன்னும் லேசுபட்ட ஆளா 15500 க்கு பதினைஞ்சு லட்சமா நீங்களே எடுத்துட்டு மீதிப்பணத்தை எனக்கு கொடுங்கன்னு கேட்டுருக்கார், அவன் கடுப்பாயி நாளைக்குள்ள பணம் கட்டல உனக்கு கிப்ட் கிட்டலன்னு கறாரா சொல்லி இருக்கான், அடுத்தநாள் நம்மாளு சரி உனக்கும் வேணாம் எனக்கு வேணாம் ஏழுகோடியில இரண்டு கோடிய நீயே வச்சுக்க, எனக்கு பேலன்ஸ் அஞ்சு மட்டும் போதும், டீலா? நோ டீலா?ன்னு கேட்க அவன் விவேக்கு ஒருபடத்துல சொல்லுவாரே அந்த ஒத்தவார்த்தை அத சொல்லிட்டு போன கட் பண்ணிட்டானாம்.

அன்னைக்கு சாயங்காலம் அவரு வீட்டுக்கு போயிருந்தேன், குவாட்டர ஊத்திட்டு பொலம்பிட்டு இருந்தாரு, அய்யோ போச்சே ஏழு கோடி போச்சே, இனி சூர்யாகிட்டத்தான் போயிதான் ஹாட் சீட்டுல உட்காரணுமா அவன் கேணத்தனமா கேள்வியெல்லாம் கேட்பானே, ஈசியா வந்தது மிஸ்ஸாயிடுச்சேன்னு, அட ஏண்ணா நீங்கவேற அவனுகளே பிராடு பசங்க, நாந்தான் அப்பவே சொன்னன்ல பணம் கேட்பானுகன்னு, நீங்கதான் கேட்கலன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.

சாப்பிட்டுட்டு படுத்து தூங்கலாம்னு படுக்கும் போது என்னோட செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது, உங்களுக்கு ஏழுகோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு, உங்க அட்ரஸ், போன் நம்பர் இந்த மெயில் ஐடிக்கு அனுப்புங்க

MDHONDA@GMAIL.COM அடப்பாவிகளா மறுபடியும் மொதல்ல இருந்தா? அவ்வ்வ்வ்!!!!   

டிஸ்கி : நிறைய பேருக்கு இந்தமாதிரி எஸ்.எம்.எஸ் வந்திருக்கும், இந்த எஸ்.எம்.எஸ்களுக்கு ரிப்ளை பண்ணுனா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது, தெரிஞ்சுகட்டுமேன்னுதான் இந்த பதிவு.



Monday, June 25, 2012

வெல்கம் டூ ஆல் இன் ஆல் அல்வா சிட்டி !! சென்னைக்கு மிக அருகில் !!!



சார் சார் எந்திரிங்க நம்ம சைட் வந்திருச்சு

ஆவ்வ்வ், வந்துருச்சா? வண்டில ஏறும் போது தசாவதாரம் படம் போட்டீங்களா முழுப்படமும் பார்த்து முடிஞ்சு அரைமணி நேரம் ஆகியும் நம்ம சைட்டு வரலீங்களா? அதான் அசந்து தூங்கிட்டேன்.

சரி சரி எந்திரிங்க, மூஞ்சிய நல்லா தொடச்சுக்குங்க, டிவில பேட்டி எடுப்பாங்க

ஏஜெண்ட் சொல்ல சொல்லவே வண்டி அந்த மண்பாதையில் ஒரு எஸ் பெண்ட் எடுத்து திரும்பியது

வாசலில் டிவிஸ்டார் தீபக் மைக்குடன் நின்று கொண்டிருந்தார்.

வெல்கம், வெல்கம், இந்த ஆல் இன் ஆல் அல்வாசிட்டிக்கு இடம் வாங்க வந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன், வாங்க வாங்க, உள்ள வாங்க

ரொம்ப நன்றிங்க தீபக், நான் உங்க ரசிகன்க. டிவில வர உங்க சீரியல் ஒன்னுவிடாம பாத்துருவேன், ஆமா டிடி எப்படி இருக்காங்க, கூட வரலிங்களா?

ஹி ஹி அவங்க வேற எடத்துல இருக்காங்க, இப்ப வந்துருவாங்க சொல்லுங்க, உங்க பேர் என்ன? எங்கிருந்து வரீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

என் பேரு காத்தமுத்துங்க, சென்னையில இருந்து வரேனுங்க, பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்க,

சரி இப்ப சொல்லுங்க, இங்க ஏன் எடம் வாங்கனும்னு நினைச்சீங்க?


அதுங்களா? எம்பொண்டாட்டி கொஞ்சம் சீரியல் பைத்தியம், நீங்கதான் சும்மா இருக்காம காலையில ஏழுமணிக்கே டிவில வந்து எடம் வாங்குங்க எடம் வாங்குங்கன்னு சொன்னிங்களா? அதுவும் இல்லாம சென்னைக்கு ரொம்ப பக்கத்துலன்னு வெறும் 450 கிலோமீட்டர்தான்னு சொன்னீங்க, அதான் வாங்கலாம் வந்தேன், ஆனா பாருங்க டிவில போட்ட படம் கூட முடிஞ்சு அரைமணி நேரம் ஆகிருச்சு எடம் வரல, அதான் லைட்டா அசந்து தூங்கிட்டேன்

அட சென்னைக்கு ரொம்ப பக்கத்துலதாங்க இருக்கோம், ஐஸ்ட் 450 கிலோமீட்டர்ஸ், வாக்கபுள் டிஸ்டண்ஸ்தான், படம் ரொம்ப சின்னப்படம் போலருக்கு,

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

ஒக்கே காத்தமுத்து, உங்கள சுருக்கமா காத்துன்னு கூப்பிடறேன், இப்போ நம்ம சைட்ட சுத்திப்பாக்கலாமா?

தாராளமா?

அங்க பாத்தீங்களா காத்து கட்சிகொடிகள்?

ஆமாங்க, பொதுவா ரியல் எஸ்டேட்டுனா .நா சபை கணக்கா கலர் கலர் கொடிகளதான பறக்க விட்டுருப்பாங்க, இது என்னங்க வெறும் கட்சிக்கொடிகளா இருக்கு?

அதுதான் நம்ம சைட்டோட ஸ்பெசாலிட்டி, இங்க எல்லா கட்சிக்கும் பிராஞ்ச் ஓப்பன் பண்ணி இருக்கோம், உங்களுக்கு புடிச்ச கட்சியில நீங்க சேர்ந்துக்கலாம், எப்படி எங்க ஐடியா?

வெளங்கிரும், ஆரம்பவே அரசியலா? சரி தண்ணி வசதியெல்லாம் எப்படி?

தண்ணி வசதியா அதுக்கென்ன? நம்ம சைட்டுல மொத்தம் முப்பத்தேழு வீதி, வீதிக்கு ஒன்னா முப்பத்தேழு டாஸ்மார்க் தொறக்கனும்னு அரசாங்கத்துகிட்ட மனு போட்டுருக்கோம், சீக்கிரமே தொறந்துருவாங்க

யோவ் நான் குடிதண்ணி வசதி எப்படி இருக்குன்னு கேட்டா? நீ சாராயகடைய பத்தி சொல்லிட்டு இருக்கிற?

குடிதண்ணி வசதிங்களா? அங்க பாருங்க மேல்நிலை தொட்டி கட்டி வச்சிருக்கோம்.

உள்ள தண்ணி இருக்குங்களா?

இப்ப இல்ல, தண்ணிக்காக போர் போட்டுட்டு இருக்காங்க, இதுவரைக்கும் இரண்டு லட்சம் அடிகள் வரை தோண்டியாச்சு, இன்னும் ஒரு அம்பதாயிரம் அடி தோண்டுனா வந்துரும்னு சொல்லி இருக்காங்க

எது பூமியோட அடுத்த பக்கமா?

சார் ஒரே தமாசு, இங்க ஸ்விம்மிங் பூல் வசதி கூட இருக்கு பாக்கறீங்களா?

வேணாம் வேணாம், மத்த வசதிகள் எல்லாம் எப்படி?


எல்லா வசதிகளுமே இருக்குங்க சார், பத்தடிக்கு எப்படி ரோடு போட்டுக்கோம் பார்ந்தீங்களா?

சைட்டுனு இருந்தா ரோடு போட்டுத்தான்யா ஆகனும்

ரோட்டு சைடுல பூங்கா வச்சிருக்கோம், குழந்தைக வெளையாடறதுக்கு வசதி பண்ணி கொடுத்திருக்கோம், முக்கியமா உங்களுக்கு சேப்டி முக்கியம், அதனால பாதுகாப்பு வசதிகள் பண்ணி கொடுத்திருக்கோம்

என்ன பாதுகாப்பு வசதி?

அங்க பார்த்தீங்களா எவ்ளோ பெரிய காம்பவுண்டு செவுரு? எவ்ளோ பெரிய கேட்டுன்னு இதை தாண்டி யாராச்சும் உள்ள வரமுடியுமா?

க்கும் முன்னாடி மட்டும்தான் செவுரு கட்டி வச்சிருக்கீங்க, மீதி மூணு பக்கமும் வெறுமனே கிடக்கு?

சார் திருடன்னா செவுரு ஏறித்தான குதிப்பான், அங்கதான் செவுரு இல்லியே?

வெளங்கிரும், சரி கரண்டு வசதி இருக்கா?

சார் இங்கிருந்து ஐஸ்ட் 250 கிலோமீட்டர்ல இருக்கற மின்நகர் அப்படிங்கற சைட்டு வரைக்கும் இபி லைன் வந்திருச்சுங்க சார், அப்புறம் என்ன இன்னும் கொஞ்ச நாள்ள இங்கயும் வந்துரும் சார்

நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா ஆஃபர் எதுவும் இல்லையா? மாசத்தவணை இந்தமாதிரி எதுவும்?


சார் சூப்பர் ஆஃபர் ஒன்னு இருக்கு சார், அதுவும் இன்னைக்கு ஒருநாள் மட்டும்தான்

சொல்லுங்க

இன்னைக்கே ஒரு பத்தாயிரம் கட்டி முன்பதிவு பண்ணிட்டீங்கன்னா ஒரு கிராம் தங்கம் இலவசம் சார்

ஒரு கிராமே ஐயாயிரத்துக்குள்ளதான வரும்?

அங்கதான் நீங்க தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க, இன்னைக்கு பத்தாயிரம் கட்டி புக் பண்ணிட்டீங்கன்னா அந்த இடம் உங்கபேர்ல ரிஜிஸ்டர் ஆகிரும், அப்புறம் ஒருலட்சம் மட்டும் அட்வான்ஸ் கட்டுனா போதும், அப்புறம் மாதத்தவணை ஐயாயிரம்னு சாகறவரைக்கும் கட்டிடுங்க, காரியம் உங்களுக்கு ச்சீ சீ கிரயம் உங்களுக்கு ப்ஃரீ

ஞே..!

அதுமட்டுமில்லைங்க, நம்ம சைட்ட ஒட்டியே கூடிய சீக்கிரமே மின்மயானமும் வரப்போகுது? நீங்க உங்க குடும்பத்துல இருக்கறவங்கன்னு யாரு செத்துபோனாலும் ஈசியா எரிச்சுக்கலாம், அஞ்சு வருசத்துக்கு உங்களுக்கு திதி பண்ண ஐயர் ப்ஃரீ, அதுக்கப்புறம் மிகக்குறைந்த விலையில ஐஸ்ட் ஃபைவ் தொளசவுண்ட் மட்டும் ஐயருக்கு குடுத்தா போதும்

அடேங்கப்பா

இதுமட்டும் இல்லீங்க, நம்ம சைட்ட சுத்தி பஸ்ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன், போலீஸ் ஸ்டேசன், கார்ப்பரேசன் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ்மார்க்கெட்டுன்னு எல்லாமும் வரப்போகுதுன்னா பார்த்துக்கங்க

இதெல்லாம் எப்படிங்க?

அட இது என்னங்க பெரிய விசயம்? நம்ம சைட்டுல இருந்து மூணே மணிநேரத்துல துபாய், மலேசியா, சிங்கப்பூருன்னு எல்லா ஊருக்கும் போகமுடியும் தெரியுங்களா?

எப்படிங்க?

சைட்டுக்குள்ளயே ஏர்போர்டு வரப்போகுது

எல்லாம் சரிதாணுங்க, ஆனா என்னமோ ஒன்னு குறையுதுங்களே?

நீங்க என்ன எதிர்பார்க்கறீங்கன்னு புரிஞ்சிருச்சு, அட இதோ டிடியே வந்துட்டாங்களே? வாம்மா வாம்மா சாருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லு?

என்ன சார்? உங்களுக்கு என்ன டவுட்டு

ஹி ஹி ஹி டவுட்டே இல்லைங்க, இப்ப முழுசா புரிஞ்சிருச்சுங்கோ, இந்தாங்க புடிங்க அட்வான்ச, அடுத்த தடவை அப்படியே அந்த தென்றல் சீரியல்ல நடிக்கறவங்கள கூட்டிட்டு வாங்க, ரொம்ப நல்ல பொண்ணுங்க அது, பாவம் அத கண்கலங்காம காப்பாத்துங்க தீபக்கு


தீபக் & டிடி : இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கறவரைக்கும் நம்மள யாரும் அசச்சிக்க முடியாது, அசச்சிக்க முடியாது

டிஸ்கி :- இந்த பதிவில் வரும் சம்பவங்கள், பெயர்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே, போட்டோக்கள் மாடல்களே, யாரையும் குறிப்பிடுவன அல்ல [ நம்பவா போறீங்க? ]