Wednesday, August 22, 2012

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விண்ணப்பம் ..!


அன்புள்ள வலையுலக அன்பர்களுக்கு
சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், படித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

ஹாய் சுரேஷ் அண்ணா,
உங்கள் வலைப்பூவை பார்த்து படித்து உங்களிடம் எனது எண்ணங்கலை பகர்ந்து கொள்ள விரும்புகிறேன் .நான் திருப்பூரில் வசிக்கிறேன் எனது பெயர் கி.லோஹித் குமார் வயது 19 . என் அப்பா கிருஷ்னராஜ் அம்மா தனலக்ஷ்மி. நான் 10 வகுப்பு வரை திருப்பூர் சுப்பையா பள்ளியில்படித்தேன்.கல்வி மேம்பாட்டுக்காக நான் ஈங்கூரில் உள்ள கங்கா பள்ளி விடுதியல் +1 வகுப்பில் 2008 ஆம்ஆண்டு சேர்ந்து படித்துகொண்டு இருந்தேன். +1 முடித்து +2 வில் வகுப்பில் முதல் மாணவனாக படித்தேன். தவிர,நான் மாவட்ட அளவில் கைபந்துவீரன்.அது சமயம் 20 .10 .2009 அன்று எனதுஉடல் நிலை சரி இல்லாமல் இருந்த்தது பள்ளி விடுதி காப்பாளர்களின் கவனக்குறைவினால் நான் தனியாக உணவு உண்டு விட்டு வரும்போது திடிரென்று மயக்கம் வந்து படியில் மேல்பகுதியல் இருந்து கீழ்பகுதியல் விழுந்ததில் எனது வாழ்கையே மாறிவிட்டது.


காரணம்,விடுதிகாப்பாளர்களின் கவனக்குறைவு அலட்சியம் எனக்கு அன்று காலை முதல் உடல்நிலை சரீல்ல அதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டு இருந்தால் எனக்கு எந்த நிலை ஏற்பட்டு இருக்காது.சுமார் 2 ஆண்டுக்கு மேலாக படுக்கையில் இருக்கிறேன் இன்று நான் மற்றவர் உதவி நாடி உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.எனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரகூடாது ஓவ்வொரு பள்ளிஇயலும்stretcherஅவசியம்வைத்து இருக்கவேண்டும்.இனிமேலும் பள்ளிகளில் எந்த மாணவன் விழுந்தாலும் stretcher மட்டுமே படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் நான் படும் துன்பம் இனி எந்த உயர்களும் படகூடாது இதற்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

இதனால் நான் படிப்பை இடையில் விட்டபோதும் 2 ஆண்டுகள் கழித்து +2 தேர்வை உதவியாளரோடு எழுதி 953 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தேன். இன்றுவரை என் பெற்றோர்கள் செய்யும் மருத்துவ செலவுகள் அனைத்தும் அவர்கள் வருமானத்துக்கு உட்பட்டு செய்கிறார்கள் அப்படி முடியாதவகையில்செலவு வரும்போது நண்பர்கள் நன்கொடை மூலம் உதவி செய்கிறார்கள். இதுவே எனது என்றைய நிலைமை. நான் விரைவில் எழுந்து நடமாடவேண்டும நமது வலை முலம் வலைபூமூலம் அனைவரும்ஆண்டவனை பிராத்திக்கவேண்டுகிறேன்.நான் எப்பொழுது எழுந்து நடப்பேன் இதற்க்கு யார் பொறுப்பு ?.....பள்ளி நிர்வாகமா? விடுதி காப்பாளரா? என் பெற்றோரா? உங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்.
நன்றி
கே.லோஹித் குமார்.


மின்னஞ்சலை படித்து முடித்ததும் மனதுக்குள் ஏதோவொரு கனம் ஏறிக்கொண்டது, பெரும்பாலான விபத்துக்களில் உயிரிழப்பு, உடல் அவயங்கள் இழப்பு நேரிடுவது என்பது சரியான நேரங்களில் கொண்டு செல்ல தவறுவது, அல்லது சரியான முறையினில் கொண்டு செல்ல தவறுவது போன்ற காரணங்களாலே நடக்கிறது, லோஹித்தை பொறுத்தவரை கழுத்தெலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது, அதனையறியாமல் அல்லது சரியான முறையில் கையாள தெரியாமல் பள்ளி நிர்வாகம் கொண்டு சென்றதே அந்த தம்பியின் இப்பொழுதைய நிலைக்கு காரணம், இந்நிலை மேற்கொண்டு எந்த மாணவருக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்வது பள்ளிகள், மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு, ஒவ்வொரு உயிரிழப்பு நேரிடும் போதும், ஆறுதல் சொல்வதும், நிவாரணம் அழிப்பதும், பேருக்கு ஒரு நடவடிக்கை எடுப்பதும் சரியாக இருக்காது.

வரும்முன் காப்பதே சிறந்தது என்னும் பழமொழிக்கெற்ப ஒவ்வொரு பள்ளியும், தன்னுடைய பள்ளிகளில் அவசரகால வெளியேற்றும் வழிகள், தீ தடுக்கும் கருவிகள், அதனை செயல்படுத்தும் வழிமுறைகள், அடிபட்டால் கொடுக்க வேண்டிய முதலுதவி பயிற்சிகள் பெற்றவர்கள், ஸ்டெரெச்சர்கள், மருத்துவ செவிலியர்கள், அதிகம் பேர் படிக்கும் பள்ளிகளில் குறைந்த பட்சம் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ், நீச்சல் பயிற்சி அளிக்கும் குளங்களில் தகுந்த கண்காணிப்பாளர்கள், சரியான முறையில் பராமரிக்கப்படும் பேருந்துகள், தகுந்த அனுபவமுள்ள டிரைவர்கள் என சகலமும் செய்து தர வேண்டும், அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், இதனை தொடர்ச்சியாக அரசாங்கமும், தன்னார்வலர்களும் கண்காணிக்க வேண்டும், அப்படிப்பட்ட நிலைமை வந்தாலொழிய இது போன்ற விபத்துகளும், இன்னொரு லோஹித்குமாரும் உருவாகாமல் தடுக்கும். இது நடக்குமா? அரசாங்கம் விழிக்குமா

 லோஹித்குமாரின் தற்போதைய நிலை :-       


வணக்கம்  உமது பதில் மடலை பார்த்து மகிழ்ந்தோம்.நான் லோஹித் அம்மா கி.தனலட்சுமி,லோஹித் கீழே விழுந்து  கழுத்து எலும்பு c5 ஐல்  fracture  ஏற்பட்டு அதனை ஆபரேஷன் செய்து சரி செய்து விட்டோம் நரம்புகளில் பாதிப்பு ஏற்ப்பட்டதால் இன்னும் நடக்க, உட்காரக்கூடமுடியாது.தவிர அவனுக்கு மார்பில் இருந்து பாதம்வரை எந்த உணர்வும்  இல்லை.  அவன் தன்னுடைய தேவைகள் எதுவும் செய்ய முடியாது.ஒரு வாய் தண்ணீர் கூட நாம்தான் கொடுக்க வேண்டும்.உணர்வு இல்லாமல் இருப்பதால் அவனால் திரும்பிகூட படுக்க முடியாது.2 மணி நேரத்துக்கு ஒருமுறை பக்கம் மாற்றி படுக்கவைக்க வேண்டும்.இரவு பகல் எல்லா நேரமும் எப்படி மாற்றி படுக்கவைக்க வேண்டும்.உணர்வு இல்லாமல் இருப்பதால் உடம்பில் படுக்கைபுண் வராமல் இருக்க இப்படி செய்வது  அவசியம். physio therapy  treatment  மூலம் குணமாகும் என்று  2 வருடங்கள்  hospital இல் வைத்து பார்த்தோம் பலன் ஏதும் இல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டோம்.தற்போது ஆயுர்வேதம் சிகிச்சை  செய்தவருகிறோம்

                   

முன்பைவிட சிறிது தேவலாம்.மாதம் ரூபாய் 3500 செலவாகிறது. உங்கள் அன்பின் மூலம் அன்பர்கள் யாரேனும் உதவினால் நாங்கள் நன்றிகடன்பட்டவராக  இருப்போம்.அவனை சரியான முறையல் hospital  கொண்டு சென்று இருந்தால் இவளோ பாதிப்பு ஏற்பட்டு இருக்காது நாங்கள் திருப்பூர் பாண்டியன் நகர் அருகில் இருக்கும் இந்திரா நகரில் வசிக்கறோம். நீங்கள் லோஹித் பார்க்க விரும்பினால் வரலாம்.லோஹித் கைபேசி 9003504843 எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.

இதனை தொடர்ந்து நானும், வீடு சுரேஷ்குமார் அவர்களும் லோஹித்தை அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்தோம், இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் படுத்த படுக்கையாக இருந்தாலும் பட்டப்படிப்பினை தொலைதூர கல்வியின் மூலமாக படித்து வருகிறார், வீட்டில் இருந்தபடியே எதாவது வேலை செய்ய வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறார்.

லோஹித்தின் ஒவ்வொரு அசைவிற்கும் யாராவது ஒருவரின் உதவி தேவை என்பதால் அவரது தந்தை கிருஷ்ணராஜ் அவர்களும், தாயார் தனலட்சுமி அவர்களும் அருகிலிருந்தே பார்த்துக் கொள்கிறார்கள், தொலைவில் வேலைக்கு சென்றால்கூட சிரமம் என்பதால் கிருஷ்ணராஜ் அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே குறைந்த ஊதியம் என்றாலும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது,

பல லட்ச ரூபாய்கள் தாண்டிய மருத்துவ செலவு, எப்பொழுது மகன் குணமாவான் என்பது தெரியாத நிலை, வீட்டுசெலவிற்கே வருமானம் சரியாக இருக்கும் நிலையில் மாதம் 3500 ரூபாய் அளவிற்கு ஆகும் மருந்து செலவு என திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், உதவும் நல்ல உள்ளங்களின் கருணையால் மட்டுமே தற்பொழுது மருத்துவ செலவினை சமாளித்து வருகிறார்கள்.

எனவே இப்பதிவினை படிக்கும் வலையுலக அன்பர்கள் திரு. லோஹித்குமார் அவர்கள் உடல்நிலை சரியாகவும், எழுந்து நடக்கவும் பிரார்த்தனை செய்யுமாறும், உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு உதவலாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்,

மேலதில முழு விபரங்களுக்கு இதனை கிளிக்கி படித்து பார்க்கவும்


முகவரி

Mr. K. LOHITH KUMAR
S/O S. KRISHNA RAJ
12, SV COLONY LANE VEEDHI
P.N. ROAD
TIRUPUR - 641602
PH. NO :- 98434 88028, 99942 55262, 90035 04843

BANK DETAILS

STATE BANK OF INDIA
BAZZAR BRANCH
TIRUPUR
S/B ACCOUNT NO : 30893697770
IFSC : SBIN0008677

லோஹித்குமாரை பார்க்க விரும்புகிறவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நேரில் சென்று காணலாம், லோஹித்தை தொடர்பு கொள்ள மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், உங்களுக்கு தெரிந்த உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல் இருந்தால் தயவுசெய்து பகிரவும், வீட்டில் இருந்தபடியே செய்யும் தொழில் பற்றிய தகவல் இருந்தாலும் பகிரவும், நன்றி.

டிஸ்கி :- சம்பவம் நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்னமும் லோஹித்குமார் படித்த ஈங்கூர் பள்ளியில் ஸ்ட்ரெச்சர் வசதி செய்யபடவில்லையாம், தன்னுடைய பள்ளியில் படித்த ஒரு மாணவனின் தற்போதைய நிலையை உணர்ந்தும், பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பாதுகாப்பிற்காக கவலைப்படாத இது போன்ற பள்ளிகள் இருக்கும் வரை எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு சென்ற மகன் அல்லது மகள் பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என வீட்டில் உட்கார்ந்திருக்க முடியும்?


7 comments:

  1. தாராளமா உதவி பண்ணலாம் மச்சி...என்னால் முடிந்த அளவுக்கு நான் தருகிறேன்....

    ReplyDelete
  2. தனியார் நிறுவனங்கள் என்றால் அது லாபத்திற்கு மட்டுமே என்று தெரிந்த போதிலும் கல்வி என்பது காசுக்காக மட்டுமே என்பதை உணராத வரைக்கும் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டேயிருக்கும்,

    ReplyDelete
  3. நன்றி திரு வருண் பிரகாஷ்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. இன்னும் திருந்த மனம் வரவில்லையோ அப்பள்ளிக்கு.

    ReplyDelete
  5. சீக்கிரம் அந்த மாணவன் உடல்நிலை சீராக பிரார்த்திகிறேன்..நல்ல முயற்சி நண்பா!

    ReplyDelete
  6. Boss , how is he now? do they still need assistance.. Please let me know , I will be glad to help however I can... Prasanna

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!