Tuesday, July 10, 2012

கையில் பல கோடி ! ஏமாற ஆர் யூ ரெடி ?


சமீபத்துல அண்ணன் ஒருத்தரு போன் பண்ணி சாயங்காலம் வீட்டுக்கு வா, ரொம்ப முக்கியமான விசயம், கண்டிப்பா வந்துடுன்னு போன் பண்ணுனார், சரின்னு நானும் கிளம்பி அவர் வீட்டுக்கு போனேன், என்னை பாத்ததும் டக்குன்னு சிறை நிரப்பும் போராட்டத்திற்கு போய் ஜெயிலுக்கு போகாம எஸ்கேப் ஆன உடன்பிறப்பு கணக்கா வா அந்தபக்கம் போயிடுவோம்னு ரகசியமா கூட்டிட்டு போனாரு, ஓ பயங்கர ரகசியம் போலருக்கேன்னு நானும் சைலண்டா போனேன்.

தனியா ஒரு இடத்துக்கு போய் நின்னவரு, டேய் உன்கிட்ட ஒரு விசயம் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லக்கூடாது, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னாரு, சரின்னா என்ன விசயம்னு சொல்லுங்க, யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சொன்னேன், இரண்டு மூணுதடவை சத்தியம் மேட்டர ரீபிட் பண்ணி கன்பர்மேசன் பண்ணிகிட்டு விசயத்தை சொன்னாரு மனுசன், ச்சீன்னு போயிடுச்சு.

வேற ஒன்னும் இல்லீங்க, இவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்கு இவரோட நம்பருக்கு ஏழுகோடி ரூபா பரிசு விழுந்திருக்கறதா, அதுக்கு வீட்டு அட்ரஸ், போன் நம்பர், எல்லாம் மெயில் பண்ண சொல்லி எஸ்.எம்.எஸ் பண்ணி இருக்காங்க, அதைத்தான் உண்மைன்னு நம்பி என்ன மெயில் பண்ண சொல்லி கேட்கறதுக்காக கூப்பிட்டு இருந்தாரு, நானும் அண்ணா இது எல்லாம் சும்மா, டுபாகூரு மேட்டரு, இதையெல்லாம் பெருசா நினைக்காம விட்டுடுங்கன்னு சொன்னா ஆளு கேட்கவே இல்லை, டேய் நோக்கியா கம்பெனில இருந்து மெசேஜ் அனுப்பி இருக்காங்கடா? ஒருவேளை நிசமா இருந்தா ஏழு கோடிடா மெயில் அனுப்புடான்னு ஒரே தொல்லை.


நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன் அண்ணன் கேட்கற மாதிரி இல்லை, சரி அனுப்பித்தான் தொலைவோம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு எஸ்.எம்.எஸ் வாங்கி பாத்தா MDNOKIA@GMAIL.COM அப்படிங்கற மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லி இருந்தது, அடப்பாவி நோக்கியா கம்பெனி எம்,டிக்கு சொந்தமா ஒரு டொமைன் வாங்கக்கூடவா காசிருக்காது, ஜிமெயில் ஐடிய வச்சிருக்கானே? 1100 மாடல்லயே 2ஜி அளவுக்கு சம்பாதிச்சிருப்பானேன்னு இதையும் சொன்னேன், எங்கண்ணந்தான் அடைந்தால் ஏழுகோடி இல்லையேல் தெருக்கோடின்னு உறுதியா நின்னதால வேற வழி இல்லாம இதுக்குன்னே ஒரு மெயில் ஐடிய ஓப்பன் பண்ணி பேரு, அட்ரஸ், போன் நம்பருன்னு எல்லாத்தையும் அனுப்பி வச்சேன்.

எவண்டா சிக்குவான்னு போர்வைய போத்திட்டு காத்திகிட்டு இருக்கானுகளே கம்முனாட்டி பசங்க மெயில் அனுப்புன ஒருமணி நேரத்துல ரிப்ளை வந்திருச்சு, அது என்னன்னா, இந்தமாதிரி ஏழுகோடியே நாற்பது லட்சம் ரூபா பரிசுத்தொகை உங்களுக்கு விழுந்திருக்கு, அதுக்கு வாழ்த்துக்கள், அப்புறம் இந்த பணம் உங்க கைக்கு கிடைக்கற வரைக்கும் யாருகிட்டயும் சொல்லக்கூடாது, ஏன்னா சட்டசிக்கல் வந்துரும், டேக்ஸ் கட்ட சொல்லுவாங்க, பணத்த நாளைக்கு விமானத்துல அனுப்பி வைக்கிறோம், எங்க ஆபீசரு ஜேக்கப் ஆண்டர்சன் கூடவே வருவாரு, உங்களோட கிப்ட் பாக்ச கஸ்டம்சுல இருந்து ஈசியா வாங்கித்தருவாரு, அப்படி இப்படின்னு, கடைசியா மேட்டருக்கு வந்தானுக அதாவது உங்களோட ஐடி, ப்ரூப் ஒன்னும், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் சார்ஜ் 15500 ரூபாயும் கொண்டு வாங்கன்னு.

[ அந்த மெயில்ல வந்திருந்தது கீழ இருக்கற டாக்குமெண்ட்ஸ்தான்]


நானும் உடனடியா ரிப்ளை எதுவும் பண்ணாம ஒரு ரெண்டுநாள் சும்மா விட்டுட்டேன், அடுத்தடுத்த நாள் மெயில் அனுப்பிட்டே இருந்தானுக, நாளைக்கு ப்ளைட் லேண்டிங் லேண்டிங்னு நான் ரிப்ளையே அனுப்பல, அண்ணன் வீட்டு பக்கமும் போகல, சரின்னு மூணாவது நாள் இதையெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு அண்ணன் வீட்டுக்கு போனா அவனுங்க அடுத்தநாளே போன் பண்ணி பேசியிருக்கானுக, 15500 ரூபாய் அமவுண்டை நாங்க சொல்ர அக்கவுண்ட் நம்பர்ல போடுங்கன்னு

நம்ம அண்ணன் ஏற்கனவே வயித்துக்கு கஞ்சி வாய்க்கு பீடின்னு வாழுற ஆளு, என்கிட்ட முன்னூரு ரூபாதான் இருக்குது, சனிக்கிழமை சம்பளம் வாங்குனா ஆயிரம் கிடைக்கும் மொத்தமா 1300 இப்ப வச்சுக்கங்க, அப்புறம் ஏழுகோடி கிடைச்சதும் மீதிய கொடுத்துடறேன்னு சொல்லி இருக்காரு, அவனுங்க அதெல்லாம் முடியாது மொத்தமா 15500 வேணும் இல்லைன்னா பணம் கிடைக்காதுன்னு சொல்லிட்டானுக

இப்படியே அடுத்தநாளும் போன் பண்ணி இருக்கானுக, நம்மண்ணன்னும் லேசுபட்ட ஆளா 15500 க்கு பதினைஞ்சு லட்சமா நீங்களே எடுத்துட்டு மீதிப்பணத்தை எனக்கு கொடுங்கன்னு கேட்டுருக்கார், அவன் கடுப்பாயி நாளைக்குள்ள பணம் கட்டல உனக்கு கிப்ட் கிட்டலன்னு கறாரா சொல்லி இருக்கான், அடுத்தநாள் நம்மாளு சரி உனக்கும் வேணாம் எனக்கு வேணாம் ஏழுகோடியில இரண்டு கோடிய நீயே வச்சுக்க, எனக்கு பேலன்ஸ் அஞ்சு மட்டும் போதும், டீலா? நோ டீலா?ன்னு கேட்க அவன் விவேக்கு ஒருபடத்துல சொல்லுவாரே அந்த ஒத்தவார்த்தை அத சொல்லிட்டு போன கட் பண்ணிட்டானாம்.

அன்னைக்கு சாயங்காலம் அவரு வீட்டுக்கு போயிருந்தேன், குவாட்டர ஊத்திட்டு பொலம்பிட்டு இருந்தாரு, அய்யோ போச்சே ஏழு கோடி போச்சே, இனி சூர்யாகிட்டத்தான் போயிதான் ஹாட் சீட்டுல உட்காரணுமா அவன் கேணத்தனமா கேள்வியெல்லாம் கேட்பானே, ஈசியா வந்தது மிஸ்ஸாயிடுச்சேன்னு, அட ஏண்ணா நீங்கவேற அவனுகளே பிராடு பசங்க, நாந்தான் அப்பவே சொன்னன்ல பணம் கேட்பானுகன்னு, நீங்கதான் கேட்கலன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.

சாப்பிட்டுட்டு படுத்து தூங்கலாம்னு படுக்கும் போது என்னோட செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது, உங்களுக்கு ஏழுகோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு, உங்க அட்ரஸ், போன் நம்பர் இந்த மெயில் ஐடிக்கு அனுப்புங்க

MDHONDA@GMAIL.COM அடப்பாவிகளா மறுபடியும் மொதல்ல இருந்தா? அவ்வ்வ்வ்!!!!   

டிஸ்கி : நிறைய பேருக்கு இந்தமாதிரி எஸ்.எம்.எஸ் வந்திருக்கும், இந்த எஸ்.எம்.எஸ்களுக்கு ரிப்ளை பண்ணுனா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது, தெரிஞ்சுகட்டுமேன்னுதான் இந்த பதிவு.



40 comments:

  1. மாப்ளே விஷயம் என்ன வேணா இருக்கட்டும் அதை அனுபவித்து எழுதும் போது தனி சுகம் தான்..

    ReplyDelete
  2. பொறுப்புணர்ச்சி கண்டு மெய் சிலிர்த்தேன்

    ReplyDelete
  3. ஏமாறுகிறவன் இருக்கும் வரை.....

    விழிப்புணர்ச்சி பதிவு மாப்ளே நீர் எங்கயோ போய்டீறு

    ReplyDelete
  4. //அய்யோ போச்சே ஏழு கோடி போச்சே, இனி சூர்யாகிட்டத்தான் போயிதான் ஹாட் சீட்டுல உட்காரணுமா அவன் கேணத்தனமா கேள்வியெல்லாம் கேட்பானே//

    சந்தடி சாக்குல... இந்த நக்கல் தான் மாப்ளே உங்ககிட்ட உள்ள ஹை லைட்

    ReplyDelete
  5. யோவ்... நான் தனியாச் சொன்னத, பதிவாப் போட்டுட்டியே!!!

    சரி சரி..... சரக்கு வாங்கிட்டு நேரமே வந்து சேரு!!

    ReplyDelete
  6. ரகசியம் பேச கூப்பிட்ட அண்ணன் - அவனுங்க நேரடியா போன்ல கூப்பிட்டு பேசியதை ஏன் மாப்ளே உங்ககிட்ட சொல்லல...

    சொன்ன தம்பி பங்கு கேட்பான்னுதானே

    ReplyDelete
  7. ஒரு சிறந்த எழுத்தாளனுக்குரிய அத்துனை தகுதிகளும் உனக்கு இருக்கு தம்பி .............நீ நல்ல வருவா ( சந்தானம் மாதிரி ) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அது சரி....! இன்னும் இந்த மெயில் அனுப்புகிற பசங்க திருந்தலையா...?

    ReplyDelete
  9. எனக்கு இந்தியாவ புல்லா சுத்திகாட்டுறன்னு ஒரு மெயில் வந்தது ஒரு பிளைட் கம்பனிகிட்ட இருந்து, கோயமுத்தூர்ல ஒரு குறிப்பிட்ட அட்ரஸ்க்கு வரச் சொன்னாங்க நானும் மாக்கானாட்டம் போனேன்...!
    கூல்டிரிங்ஸ் பப்ஸ் எல்லாம் கொடுத்தாங்க....மொத்த பேக்கேஜ் ஒரு லட்சம் சார் நீங்க ஒரு 35ஆயிரம் மட்டும் கட்டுங்க அப்படின்னாங்க....இருங்க சார் ATM ல பணம் எடுத்துட்டு வரேன்னு வுட்டேன் ஜூட்....!

    ReplyDelete
  10. அப்போ வடை போச்சா....

    ReplyDelete
  11. என்னமோ போடா மாதவா ..... ஊருக்கு உபயோகமான பதிவெல்லாம் போடுற ......... ம்ம்ம்

    ReplyDelete
  12. என்ன மச்சி...அப்புறம் அந்த ஹோண்டா MD க்கு மெயில் அனுப்பாம விட்டுட்ட..ஏழு கோடி போச்சே..

    ReplyDelete
  13. இந்த மெயில்கல் எல்லாம் இன்னுமும் என் இன்பாக்ஸ்ல இருக்கு...
    இதை பத்தி ஒரு போட்டி வச்சேனே ...நீங்க கலந்துக்கலையா????

    வேணா என் ப்ளாக் பக்கம் வந்து போட்டில கலந்துக்குங்க...

    ReplyDelete
  14. இந்த மாதிரி நிறைய வருது.நல்லாப் படிச்சவங்க கூட ஏமாறுவதுதான் ஆச்சரியம்

    ReplyDelete
  15. உங்க பங்காளிங்க விட மாட்டாங்க போலிருக்கே. சர்ர்ர்ன்னு வந்து இறங்கிடுறாங்க? எப்பூடி?

    ReplyDelete
  16. வணக்கம் சொந்தமே...!
    மனுசன் நொந்து போன் இருந்தாலும் அத ரசிக்கும்படி சொல்லி சிரிக்க வச்சுட்டீங்க..ஏமாறவங்க இருக்கும் வரை............!

    ReplyDelete
  17. அட எனக்குதான் இப்படியான மெயில் வருதுன்னு இதுவரை நினைத்திருந்தேன்..

    ReplyDelete
  18. அடடா.... வெறும் ஏழு கோடி ரூபாய்க்கே இப்படின்னா........ மூணரை மில்லியன் டாலர் கிடைச்ச நான் எப்படியெல்லாம் சொல்லணும்:-)))))

    ஏமாற ஆட்கள் இருக்கும்வரை இப்படித்தான் ஏமாற்ற ஆட்கள் இருப்பாங்க:-(

    ReplyDelete
  19. @ மனசாட்சி™ said...
    மாப்ளே விஷயம் என்ன வேணா இருக்கட்டும் அதை அனுபவித்து எழுதும் போது தனி சுகம் தான்..//

    உண்மைதான் மாம்ஸ்

    ReplyDelete
  20. @ மனசாட்சி™ said...
    ரகசியம் பேச கூப்பிட்ட அண்ணன் - அவனுங்க நேரடியா போன்ல கூப்பிட்டு பேசியதை ஏன் மாப்ளே உங்ககிட்ட சொல்லல...

    சொன்ன தம்பி பங்கு கேட்பான்னுதானே//

    ஹி ஹி ஹி அதுதான் கிடைக்காதுன்னு எனக்கு ஏற்கனவே தெரியுமே அதுனால நோ பீலிங், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  21. @ வெளங்காதவன்™ said...
    யோவ்... நான் தனியாச் சொன்னத, பதிவாப் போட்டுட்டியே!!!

    சரி சரி..... சரக்கு வாங்கிட்டு நேரமே வந்து சேரு!!//

    உங்கள் அற்புதமான கருத்துக்களை கண்டு மெய்சிலிர்த்தேன், மகிழ்ந்தேன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. @ கோவை மு.சரளா said...
    ஒரு சிறந்த எழுத்தாளனுக்குரிய அத்துனை தகுதிகளும் உனக்கு இருக்கு தம்பி .............நீ நல்ல வருவா ( சந்தானம் மாதிரி ) வாழ்த்துக்கள்//

    சந்தானம் மாதிரியா நன்றியோ நன்றி அக்கா

    ReplyDelete
  23. @ வீடு சுரேஸ்குமார் said...
    அது சரி....! இன்னும் இந்த மெயில் அனுப்புகிற பசங்க திருந்தலையா...?//

    மாம்ஸ் இது மெயில் இல்லை, எஸ்.எம்.எஸ்

    ReplyDelete
  24. வீடு சுரேஸ்குமார் said...
    எனக்கு இந்தியாவ புல்லா சுத்திகாட்டுறன்னு ஒரு மெயில் வந்தது ஒரு பிளைட் கம்பனிகிட்ட இருந்து, கோயமுத்தூர்ல ஒரு குறிப்பிட்ட அட்ரஸ்க்கு வரச் சொன்னாங்க நானும் மாக்கானாட்டம் போனேன்...!
    கூல்டிரிங்ஸ் பப்ஸ் எல்லாம் கொடுத்தாங்க....மொத்த பேக்கேஜ் ஒரு லட்சம் சார் நீங்க ஒரு 35ஆயிரம் மட்டும் கட்டுங்க அப்படின்னாங்க....இருங்க சார் ATM ல பணம் எடுத்துட்டு வரேன்னு வுட்டேன் ஜூட்....!//

    நல்லா காட்டு காட்டுன்னு காட்டிட்டாங்க போல விடுங்க மாம்ஸ் உங்களுக்கு ஒரு பப்ஸ், கூல்டிரிங்ஸ் லாபம்தான்

    ReplyDelete
  25. @ Robert said...
    அப்போ வடை போச்சா....//

    வடையே போடலங்கறேன் :-)

    ReplyDelete
  26. @ sasemkumar said...
    என்னமோ போடா மாதவா ..... ஊருக்கு உபயோகமான பதிவெல்லாம் போடுற ......... ம்ம்ம்//

    மெதுவா பேசுடா உன் சொந்தகாரங்க சண்டைக்கு வந்துட போறாங்க

    ReplyDelete
  27. @ கோவை நேரம் said...
    என்ன மச்சி...அப்புறம் அந்த ஹோண்டா MD க்கு மெயில் அனுப்பாம விட்டுட்ட..ஏழு கோடி போச்சே..//

    அனுப்பிருவோம் மச்சி, அடுத்த போஸ்டுக்கு யூஸ் ஆகும்

    ReplyDelete
  28. @ NAAI-NAKKS said...
    இந்த மெயில்கல் எல்லாம் இன்னுமும் என் இன்பாக்ஸ்ல இருக்கு...
    இதை பத்தி ஒரு போட்டி வச்சேனே ...நீங்க கலந்துக்கலையா????

    வேணா என் ப்ளாக் பக்கம் வந்து போட்டில கலந்துக்குங்க...//

    கலந்துக்கறேன் சார், ஆனா இது எஸ்.எம்.எஸ்ல வந்தது

    ReplyDelete
  29. @ சென்னை பித்தன் said...
    இந்த மாதிரி நிறைய வருது.நல்லாப் படிச்சவங்க கூட ஏமாறுவதுதான் ஆச்சரியம்//

    உண்மைதான் சார், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  30. @ ஜோதிஜி திருப்பூர் said...
    உங்க பங்காளிங்க விட மாட்டாங்க போலிருக்கே. சர்ர்ர்ன்னு வந்து இறங்கிடுறாங்க? எப்பூடி?//

    எல்லாம் அன்பால சேர்ந்த கூட்டம் சார், அன்பு எப்பவுமே மாறாதது :-)

    ReplyDelete
  31. @ Athisaya said...
    வணக்கம் சொந்தமே...!
    மனுசன் நொந்து போன் இருந்தாலும் அத ரசிக்கும்படி சொல்லி சிரிக்க வச்சுட்டீங்க..ஏமாறவங்க இருக்கும் வரை............!//

    நன்றிங்க சார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  32. @ காட்டான் said...
    அட எனக்குதான் இப்படியான மெயில் வருதுன்னு இதுவரை நினைத்திருந்தேன்..//

    மாம்ஸ் நான் அனுப்புனதுதான் மெயில் ஆனா வந்தது எஸ்.எம்.எஸ்தான்

    ReplyDelete
  33. @ துளசி கோபால் said...
    அடடா.... வெறும் ஏழு கோடி ரூபாய்க்கே இப்படின்னா........ மூணரை மில்லியன் டாலர் கிடைச்ச நான் எப்படியெல்லாம் சொல்லணும்:-)))))

    ஏமாற ஆட்கள் இருக்கும்வரை இப்படித்தான் ஏமாற்ற ஆட்கள் இருப்பாங்க:-(//

    உண்மைதான் மேடம், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  34. @ திண்டுக்கல் தனபாலன் said...
    நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...
    பகிர்வுக்கு நன்றி...
    தொடர வாழ்த்துக்கள் !
    (TM 5)//

    மிக்க நன்றி தனபாலன் சார், உங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  35. அண்ணே நீங்க சரியா டீல் பண்ணிருக்க மாட்டீங்க இல்லாட்டினா அந்த ஏழு கோடிய வாங்கிருக்கலாம்

    ReplyDelete
  36. அடுத்த தபா மணியை கூட்டிட்டு போங்க. 'பரிசு' நிச்சயம்.

    ReplyDelete
  37. செம பதிவுங்க. நானும் ஏன் தான் இப்படி மெயில் மற்றும் எஸ். எம். எஸ் அனுப்புரானுங்கன்னு யோசிச்சதுண்டு. கடைய்சியில் அதை அனுப்பணும்னா இவ்ளோ பணம் குடு என கேட்க தானா? ரைட்டு !

    ReplyDelete
  38. சகோ இப்படியான நடவடிக்கைக்கு எதிரான சட்டம் ஒன்றும் இல்லையா?

    பலர் ஏமாருவார்களே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

    ReplyDelete
  39. good news keep it up http://www.kollywoodthendral.in

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!