Thursday, May 24, 2012

சரக்குன்னா சந்தோசம்தான் ! சாவுன்னா சந்தேகம்தான் !!



இந்த கதை கொஞ்சநாளுக்கு முன்னால் நடந்த சம்பவம், ஒரு விழிப்புணர்வுக்காக இங்கே பதிகிறேன்.

அந்தம்மாவுக்கு 42 வயசு ஆகுது, ஏற்கனவே மூணு பொண்ணுகளை பெற்றிருந்தாலும் காலம் போன வயசுல ஆம்புளை பையனுக்கு ஆசைப்பட்ட அந்தம்மாவோட வீட்டுகாரரால மறுபடியும் கர்ப்பமா இருந்தாங்க

இங்க முக்கியமா சொல்ல வேண்டியது அந்தம்மாவோட பிளட் குரூப் ஓ நெகட்டிவ், பாசிட்டிவ் பிளட் குரூப் வேணும்னாலே பாசிடிவ்வான பதில் கிடைக்காத நம்ம ஊருல நெகட்டிவ் பிளட் குரூப் அதுவும் ரொம்ப ரேரான பிளட் குரூப்புக்கு எங்க போறது?

அவங்க மூணாவது பொண்ணு சிசேரியன்ல பொறக்கும் போதே ரொம்ப கஷ்டப்பட்டுதான் இரத்தம் கிடைச்சுதாம், இப்ப நாலாவது அதுவும் 42 வயசுலங்கறதால ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும், ஒ நெகட்டிவ் பிளட் குரூப் இருக்கற யாரையாவது பிடிச்சு வைச்சுகங்க, அவசரத்துக்கு ஒன்னும் பண்ண முடியாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரு.

அவங்க வீட்டுகாரரும் அலையோ அலைன்னு அலைஞ்சு, தெரிஞ்சவங்கள எல்லாம் கேட்டு அப்படி இப்படின்னு ஒரு வேலையில்லாத வெட்டிபயல ஆனா ஓ நெகட்டிவ் குரூப் ஆள பிடிச்சிட்டாரு

அந்தம்மாவுக்கும் எட்டு மாசம் ஆயிருச்சு, எப்ப வேணா பிரசவ வலி எடுக்கலாம்னு டாக்டர் சொன்னதால அந்த ஓ குரூப் ஆள கூடவே தங்க வச்சு நல்லா கவனிச்சுகிட்டாரு அந்த மூணு பொண்ணுங்களை பெத்த மகராசன்.

டெலிவரி ஆகப்போற நாளுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னாடியே அட்மிட் பண்ணிடுங்கன்னு டாக்டர் சொல்ல அதே மாதிரியே பண்ணிட்டாங்க, இருக்கறதே இரண்டு வாரம் அந்த பிளட் டோனர விட முடியுமான்னு அந்தாளையும் ஹாஸ்பிடல்லயே தங்க வச்சிட்டாங்க.

வெளில வேலைக்கு போனாலே நோண்டி நொங்கெடுத்து அஞ்சு பத்து போட்டு கொடுக்கறாங்க, இங்க சும்மா இரத்தம் கொடுத்தாலே மூணு வேளை மாப்பிள மாதிரி கவனிச்சுகராங்களேன்னு அவனும் சந்தோசமா தங்கிட்டான்.

தினமும் அந்தம்மா வீட்டுகாரரும், பிளட் டோனரும் காலைல இருந்து நைட்டு வரைக்கும் பிரசவ வலி வருதான்னு பார்ப்பாங்க, வரலைன்னு அவங்களே கண்டுபுடிச்சிட்டு நைட்டு சரக்கு அடிச்சுட்டு கவுந்துருவாங்க, இப்படியே ஒருவாரம் போயிருச்சு.


அதே மாதிரி ஒருநாள் நைட்டு ஒன்பது மணி வரைக்கும் பார்த்துட்டு சரக்கு அடிச்சுட்டு மல்லாந்துட்டாங்க, அன்னிக்கு பார்த்து நைட்டு பதினோரு மணிக்கு அந்தம்மாவுக்கு வலி வந்துடுச்சு, அவங்களும் எழுப்பி எழுப்பி பார்த்தா புருசன்காரனும் எந்திருக்கல, டோனரும் எந்திரிக்கல, காலம் போன காலத்துல பிரசவத்துக்கு கூட போனா மானக்கேடுன்னு சொந்தகார பய ஒருத்தனும் வரல

அந்தம்மா கத்துன கத்துல பக்கத்து ரூமு ஆளுங்கெல்லாம் வந்து டாக்டர கூப்புட்டு அட்மிட்டும் பண்ணிட்டாங்க, செக் பண்ணி பார்த்தா குழந்தையோட பொசிசன் திரும்பி இருக்கு, அர்ஜெண்டா ஆப்பரேசன் பண்ணனும்கறாங்க, பிளட்டும் கம்மியா இருக்கு, இரத்தமும் வேணும், ஆப்பரேசன் பண்ண கையெழுத்தும் வேணும், வெளில அடிக்கற மழைக்கு இரண்டு பேரும் புல் டைட்டுல சரக்கு அடிச்சிருக்காங்க.

எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு பேரையும் எழுப்பி ஆப்பரேசனுக்கு ரெடி பண்ண பார்த்தா பிளட் டோனர் குடிச்சிருக்கறதால இரத்தம் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க, நைட்டு பணிரெண்டு மணி, வெளில பேய் மழை, ஹாஸ்பிடல்லயும் இரத்தம் ஸ்டாக் இல்லை, பக்கத்துல எந்த ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணாலும் அந்த குரூப் இல்லைங்கறாங்க.

நேரம் ஆக ஆக நிலைமை சீரியசா ஆகிட்டிருக்கு, அவங்க புருஷன எல்லாரும் செம திட்டு திட்டுறாங்க, பிளட் டோனர் மட்டையானவரு, மட்டையானதுதான், கடைசியா டாக்டர் சொல்லிட்டாரு.

ஒன்னா இங்கிருந்து மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருங்க, அங்க அந்த குரூப் இரத்தம் இருக்க சான்ஸ் இருக்கு, ஆனா மெடிக்கல் காலேஜ் கொண்டு போக ஒன்னரை மணி நேரம் ஆகும், அதுக்குள்ள என்ன வேணாலும் ஆக சான்ஸ் இருக்கு, அதே சமயம் இங்கயே ஆபரேசன் பண்ண நான் தயார்தான், ஆனா உயிருக்கு பொறுப்பேற்க முடியாதுன்னு சொல்லிட்டாரு.

அந்த ஆளு கதறுன கதறல் இருக்கே, என்ன சொல்ல? ஆம்பிளை பையனுக்கு ஆசைப்பட்டு இருக்குற பொண்டாட்டியும் போயிருவா போல இருக்கேன்னு கதறுராரே தவிர ஒரு முடிவும் எடுக்காம அரைமணி நேரமா அழுதுட்டே இருக்காரு, டாக்டர் முதக்கொண்டு எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க கிளம்புங்கன்னு சொல்லுராங்க, அந்தாளு அப்பவும் ஒருமுடிவும் எடுக்கல

பார்த்திட்டு இருக்கறவங்களே வெறுத்து போயிட்டாங்க, அப்புறமா ஒரு ஆம்புலன்ஸ் கொண்டு வந்து அந்தாளு சம்மதத்தை கூட கேட்காம ரெண்டு பேரையும் ஏத்தி அனுப்பி வச்சாங்க, அந்தம்மா வலியில கத்துன கத்தும், அந்தாளு குடிச்ச குடி இப்படி குடியை கெடுக்கும்னு தெரியலியேன்னு அழுதிட்டே போனதும், ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடல் காம்பவுண்ட் செவுரு தாண்டுற வரைக்கும் கேட்டுச்சு.

இப்படித்தாங்க இப்பல்லாம் நடக்குது, முன்ன தனியார் மதுபான கடைகள் இருக்கும் போது கூட இந்தளவு குடிக்கு மக்கள் அடிமையாகி போகல, இப்ப அரசாங்கமே எடுத்து நடத்தும் போதுதான் அதிக அளவு மக்கள் குடிக்க ஆரம்பிச்சிருக்காங்க.


சுவாசிக்கறது, சாப்பிடுறது மாதிரி குடிக்கறதும் ஒரு அத்தியாவசிய கடமையா மாறிட்டு வருது, வயசுல மூத்தவங்க மட்டும் குடிக்கற நிலைமை போயி, இப்ப ஸ்கூல் படிக்கற பசங்க கூட குடிக்கறாங்க, கட்டிங் அடிக்கலைன்னா நைட்டு சாப்பிடவே முடியாதுங்கற நிலைமைக்கு பசங்க ஆளாகிட்டாங்க.

முன்னால ஒருத்தரை பார்த்தா எப்படிடா இருக்கேன்னு கேட்பாங்க? இப்பல்லாம் பசங்க யாரைவாவது நைட்டுல பார்த்தா கட்டிங் போட்டுட்டியான்னு கேட்கறாங்க, சந்தோசம், கோபம், வெறுப்பு எல்லாத்துக்குமே சரக்குதான், அவங்க சாவுக்குமே சரக்குதான் காரணம்கறதும், இப்படி பலகுடும்பங்க அழியறதுக்கும் சரக்குதான் காரணம்கறதும், அத விக்கிறது அரசாங்கம்கறதும் எவ்வளவு கேவலமான விசயம்?

இதப்பத்தி யோசிச்சிட்டு இருக்கும் போதே அவங்கள விட போன ஆம்புலன்ஸ் வேன் திரும்பி வந்துட்டு இருந்தது, என்னாச்சுன்னு கேட்காலாம்னு போனா அந்த டிரைவே சொன்னாரு, ரொம்ப சீரியசா ஆனதால போற வழில இருந்த தனியார் ஆஸ்பத்திரியிலயே சேர்த்துட்டாங்களாம், அங்க அந்த நெகட்டிவ் பிளட் குரூப் இரத்தமும் ஸ்டாக் இருந்ததால ஆப்பரேசனும் பண்ணிட்டாங்களாம், ஒன்னும் பிரச்ச்னை இல்லைன்னு சொன்னார்.

அப்பத்தான் எனக்கும் மத்தவங்களுக்கும் நிம்மதியே வந்தது.

அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்,

மறுபடியும் பொண்ணுதான் பொறந்திருக்காம்.  


6 comments:

  1. ரொம்ப கொடுமை

    ReplyDelete
  2. மதுக்கடை இது போல கண்ணுக்கு தெரியாத பல குடும்பத்தை புதை குழிக்குள் தள்ளி உள்ளது

    ReplyDelete
  3. மறுபடியும் பொண்ணுதான் பொறந்திருக்காம்.
    /////////////////

    மேல ஒருத்தன் இருக்கான்....!

    ReplyDelete
  4. KUDI KUDIYAI KEDUKKUM!
    KUDI PAZHAKKAM NAATTAI KEDUKUM!

    TASMAC KONDU VANTHA JAYALALITHA ennum PISAASU Tamizh Naatai KEDUKKUM!

    Be Aware!

    ReplyDelete
  5. ஒரு தமிழ் 'குடி ' மகனின் கடமை ,பொறுப்புணர்ச்சி கண்டு புல்லரித்துபோனேன் ........தொடர்ந்து உங்கள் கடமையை நிறைவேற்ற வாழ்த்துக்கள் ( ஹஹஹா )

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!