Showing posts with label பஸ். Show all posts
Showing posts with label பஸ். Show all posts

Monday, November 29, 2010

இவனுங்க தொல்லை தாங்க முடியல



எனக்கும் பஸ்சுக்கும் ஏழரை பொறுத்தம் போல இருக்கு, எப்பப் பார்த்தாலும் நான் பஸ்ஸில போகும் போதெல்லாம் ஒரு பிரச்சனைய சந்திக்க வேண்டி இருக்குது, 
பஸ் ரூட்டுக்கு எல்லாம் யாருங்க டைமிங் ஒதுக்கறது, அந்தாளு சரியா தான் ஒவ்வொரு பஸ்சுக்கும் டைமிங் கொடுக்கராரா? ஒன்னுமே புரிய மாட்டேங்குது, இப்படித்தான் நேத்தைக்கு அவசரா கோயம்புத்தூர் போகணும்னு திருப்பூர் பஸ் ஸ்டாண்டுல பஸ் ஏறுனா அந்த பஸ்சுக்கு முன்னாடி வந்து இன்னொரு பஸ்ஸ குறுக்க நிறுத்தி எடுக்க மாட்டேங்குராறு இன்னொரு பஸ் டிரைவர், இவனுங்க பிரச்சனையில வேற எந்த பஸ்சுமே பஸ் ஸ்டாண்ட விட்டு வெளியே போக முடியல, பயங்கரமான டிராபிக் ஜாம், 




இதுல அதிகமா இந்த பிரச்ச்னை பண்ணுரவங்க தனியார் பஸ்சுக்காரங்கதான், எங்க ஊருல ஒரு தனியார் பஸ்சு கம்பெனி இருக்கு, திருப்பூருல இருந்து சுத்தி இருக்குர அத்தனை ஊருக்கும் இவங்க பஸ் ரூட்டு வாங்கி வச்சிருக்காங்க, அரை மணி நேரத்திக்கு ஒரு பஸ்சு இங்கிருந்து கிளம்பும் அதே சமயம் அடுத்த் ஊருல இருந்து இங்க ஒரு பஸ்சு கிளம்பும் அந்தளவுக்கு நிறைய பஸ்சு வச்சிருக்காங்க, அந்த பஸ்சு கம்பெனிக்காரங்க பண்ணுரதுதான் இந்த டைமிங் பிரச்சனை, அவனுங்க யாரோட டைமிங்ல வேணாலும் பஸ்சு ஓட்டுவாங்க, ஆனா அவங்க டைமிங்ல யாராவது ஒரு நிமிஷம் குறுக்க வந்தாலும் அடிக்க போயிடுவானுங்க, அந்தளவு அடாவடித்தனம் பண்ணுராங்க, இவனுங்க பஸ்சு ஓட்டுரதும் சாதாரணமா கிடையாது ஒண்ணரை மணி நேரம் போக வேண்டிய இடத்திற்கு ஒரு மணி நேரத்தில போயிடுவானுங்க, சும்மா பேய் வேகத்துல ஓட்டுவாங்க, குறுக்க யாராவது வந்த அடுத்த அஞ்சு நிமிசத்துல அவங்களும் பேயாகிர வேண்டியதுதான், எங்க ஊருல யாராவது வண்டி ஒட்டினா சைடு மிரருல இவங்க வண்டிய பார்த்தா அவ்வளவுதான் இந்த வண்டியான்னு ரோட்ட விட்டே ஒதுங்கிறுவாங்க, அந்தளவு பயம், அது எனக்கு மட்டுமில்ல மத்த பஸ்சுகாரங்களுக்கும் இருக்குங்கறது நேத்துதான் உரைச்சது,




 மத்த பஸ்சு கம்பெனி முதலாளிகெல்லாம் டிரைவரு வேலைக்கு ஆள் எடுக்கும் போது அனுவம், திறமை, விபத்து எதுவும் நடக்காத டிரைவரா வேலைக்கு எடுப்பாங்க, ஆனா இவங்க கம்பெனில இதுக்கு முன்னாடி எத்தனை பேர கொன்னிருக்க, எத்தனை ஆக்சிடென்ட் பண்ணி இருக்கன்னு கேட்டுதான் ஆள் எடுப்பாங்கன்னு எனக்கு தெரிஞ்ச டிரைவர் ஒருத்தர் சொல்லி இருக்காரு, அது ஓரளவுக்கு உண்மைதான் எனக்கு தெரிஞ்ச வரையில் இதுவரைக்கும் ஒரு அஞ்சாறு தடவை அந்த பஸ்சு போலீஸ் ஸ்டேசன்ல நின்னு பாத்து இருக்கேன், போன நியூ இயர் அன்னைக்கு நான் திருப்பூர் போயிட்டு திரும்பி வீட்டுக்கு போயிட்டு இருந்தேன், அப்ப 15 வயசு இருக்கற டூ வீலர்ல போயிட்டு இருந்த இரண்டு பசங்கள இந்த பஸ்சு அடிச்சி தூக்கிருச்சு, அவங்க உயிரோட இருப்பாங்கன்னு யாரும் நினைக்கவும் இல்லை, ஆம்புலன்சுக்கு கூப்பிடவும் இல்லை, ஏன்னா இந்த பஸ்சு அடிச்சிருச்சா சத்தியமா சாவுதாண்டான்னு எல்லாருக்கும் தெரியும்,



ரொம்ப நாள் முன்னாடி தினமலர்ல ஒரு போட்டோ பார்த்தேன், முன்னாடி எல்லாம் கோவையில இரண்டடி இருக்கர மாதிரி டிவைடர் வச்சிருப்பாங்க, இந்த பஸ்சுக்காரன் சிக்னல்ல நிக்க பொறுமை இல்லாம அந்த டிவைடர் மேலயே பஸ்ஸ ஓட்டி ராங் ரூட்டில பஸ் ஓட்டிட்டு போரான், இவங்கள என்னதான் சொல்ரது? இத்தனைக்கும் இந்த பஸ்சு கம்பெனி முதலாளி ஒரு பொம்பளைங்க, ஒரு தடவை நான் இந்த பஸ்சுல போகும் போது இப்படித்தான் டைமிங் பிரச்சனை, வேற ஒரு தனியார் பஸ்ஸோட டைமிங்ல இவரு ஒட்டிட்டு வந்துட்டாரு, அந்த டிரைவர் வயசானவரு அவரும் கஷ்ட்டப்பட்டு ஓவர்டேக் எடுத்து நம்மாள குறுக்க நிறுத்தி ஏய்யா இப்படி என்னோட டைமிங்ல பஸ்ஸ ஓட்டரேன்னு கேட்டதுக்கு இவரு பேசுன வார்த்தை இருக்கே, முன்னாடி உக்காந்து இருந்த பொண்ணுங்க எல்லாம் பின்னாடி ஓடிப்போயிட்டாங்க, அந்தளவு நாராசமா பேசிட்டாரு, அந்த வயசான் டிரைவரும் இந்த பஸ்சில போகுர யாரும் உயிரோட போய் சேரமாட்டீங்கடான்னு சாபம் விட்டாரு, எனக்கு மனசு கஷ்ட்டமா போயிருச்சு,

ஏன் நாம எல்லாரும் இவ்வளவு சுயநலமா இருக்கோம்? தப்புன்னு எல்லாருக்கும் தெரியுது, ஆனா யாருக்கும் தட்டி கேட்க பயமா இருக்கு, நாலு பேரு ஒன்னா சேர்ந்த தைரியமா கேட்கலான்னா அந்த நாலு பேரு யாருன்னு எப்படி கண்டு பிடிக்கரது? எனக்கும் அந்த தைரியம் வரமாட்டேங்குது, இந்த பிரச்ச்னை மட்டும் இல்ல, பஸ்சுல டிக்கட்ட அதிக விலைக்கு விக்கிறது, பாக்கி சில்லறை கொடுக்காம ஏமாத்தறது, அதிக தூரம் உள்ள இடங்களுக்கு போறவங்கள மட்டும் உக்கார சொல்றது, அவங்க மட்டுமா காசு தராங்க?மத்தவங்க எல்லாம் ஓசியிலயா பஸ்சுல வராங்க? இப்படி பல யோசனைகள் வருது,   எனக்கு என்ன, எனக்கு என்னன்னு போயிட்டே இருந்தா இதுக்கு எப்பத்தான் தீர்வு கிடைக்கும்?  சரி அவங்க அவங்களுக்கு வர்ர வரைக்கும் எல்லாமே வேடிக்கைதான் இந்த உலகத்துல, ஏதோ எழுதணும்னு தோணுச்சு அதான் எழுதிட்டேன்.

( பதிவுக்கும், படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படங்கள் உதவி - நன்றி Google )

Friday, October 1, 2010

இத பத்தி என்ன சொல்றதுன்னே தெரியல

நேற்றைக்கு இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டேன், திருப்பூரின் நெருக்கடியான டிராபிக், தற்பொழுது ரோட்டை அகலப்படுத்தியதாலும், ரோட்டின் நடுவே செண்டர் மீடியன் வைத்திருந்ததாலும் சிறிதளவு குறைந்துள்ளது. சரி சீக்கிரம் வீட்டிற்கு போகலாம் என நினைத்திருந்த என் நினைப்பில் சரியாக மண் அள்ளிப் போட்டது பல்லடம் ரோட்டில் காண்ப்பட்ட டிராபிக், வெகு நேரம் காத்திருந்தும் டிராபிக் சரியாகவில்லை, சரி என்ன ஆயிற்றோ நமக்கு ஒன்றும் இது புதுசு இல்லையே என்று காத்திருந்தேன்.  முக்கால் மணி நேரத்திற்கு மேல் மெதுவாக ஊர்ந்து சென்று பார்த்தால். ”சை” என்றாகி விட்டது. பின்ன என்னங்க, ஒரு பஸ் டிரைவர், டூ விலரில் போகும் ஒருவரை சைடில் ஒதுக்கி விட்டாராம். ( சைடில் ஒதுக்குவது என்றால், டூ வீலரில் போதும் ஒருவரை இடிப்பதை போல பஸ்ஸை ஓட்டி அவரை தார் ரோட்டில் இருந்து கீழே இறங்குமாறு நிலை குலைய வைப்பது ) பொறுத்து பொறுத்து பார்த்த அந்த டூவீலர் ஓட்டுனர், பஸ்ஸை மறித்து தகறாறு செய்து கொண்டு இருந்தார். செந்தமிழ் வார்த்தையால அர்ச்சனை வேறு, டிரைவரும் பதிலுக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார். எங்க ஊர்ல டிராபிக் போலீஸ் எல்லாம் மாசக் கடைசில கேஸ் புடிக்கவோ இல்லைன்னா மாமூல் வாங்கறதுக்கு மட்டும்தான் வருவாங்க, இதுக்கு எல்லாம் வர மாட்டாங்க, டிராவிக் போலீசும் கம்மிதான், சரி வழக்கம் போல நாமலும் வேடிக்கை பார்த்துட்டு கிடைச்ச கேப்புல புகுந்து வந்துட்டேங்க.

இதுல என்ன விஷயம்னு கேட்குறீங்களா, இது விஷயம் இல்லைங்க, ஒரு மாசத்துக்கு முன்னாடி இது மாதிரியே ஒன்னு நடந்ததுங்க.

இதே மாதிரி நான் காலையில வேலைக்கு கிளம்பி வந்துட்டு இருந்தேன். திருப்பூருக்கு கொஞ்சம் முன்னாடி T.K.T MILL னு ஒரு ஸ்டாப் இருக்கு, அங்க ஒரு பஸ் கண்ணாடி உடைஞ்சு நின்னுகிட்டு இருந்தது, பஸ் டிரைவர் கைல பெரிய காயம், கை நல்லா வீங்கி இருந்தது, நாலஞ்சு பொம்பளங்க கையிலயும், மூஞ்சிலயும் காயம், பஸ்ல வந்தவங்க எல்லாம் கூட்டமா நின்னுகிட்டு வேற பஸ்சுக்காக் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க, எங்க எந்த பிரச்சனைன்னாலும் வேடிக்கை பார்க்குறதுதான் அகில உலக வழக்கமாச்சே, சரி நாமலும் போய் பார்ப்போம்னு போய் என்னங்க நடந்ததுன்னு கேட்டேங்க.



என்ன நடந்துருக்குதுன்னா, அந்த பஸ் டிரைவர் உடுமலையில் இருந்து திருப்பூருக்கு பஸ் ஒட்டிட்டு வந்திருக்காரு, அவருக்கு மனசில என்ன பிரச்சனையோ உடுமலையில இருந்து எந்த வண்டிக்கும் வ்ழி விடாம, போற, வ்ர்ற டூ வீலர் காரங்களை எல்லாம் ஒதுக்கி விட்டுட்டே வந்திருக்கார்ரு, அதுல ஒரு டூ வீலர் காரரு, பொறுக்க முடியாமல் நடு ரோட்டில் பஸ்ஸ நிறுத்தி தகறாறு பண்ணி இருக்காரு, நம்ம டிரைவரும் சளைக்காம சண்டை போட்டு இருக்காரு, உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியாது, நான் கவர்மெண்ட் டிரைவரு, முடிஞ்சா எதாவது பண்ணி பாருன்னு சவால் விட்டு இருக்காரு. 
அந்த டூ வீலர்காரரும், பண்ணிகாட்ரண்டான்னு, வேகமா கிளப்பி திருப்பூர் வந்து, அவரோட பிரண்ட் ஒருத்தரையும் கூட்டிக்கிட்டு, தலைல ஆளுக்கொரு ஹெல்மட்ட மாட்டிட்டு, கைல ஒரு பெரிய கல்லை எடுத்துக்கிட்டு பஸ்சுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்துருக்காங்க, சரியா நம்ம டிரைவரு அந்த பஸ் ஸ்டாப்புல பஸ்ஸ நிறுத்தும் போது கல்லை தூக்கி கண்ணாடி மேல போட்டுட்டு டூவீலர் காரங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாகிட்டாங்க.அதனாலதான் பஸ் டிரைவருக்கும் பயணிகளுக்கும் அடி பட்டு காயத்தோட நிக்கிறாங்க. 

இதுல யார நாம தப்பு சொல்றது, தப்பு இரண்டு பேர் மேலயும் இருக்குன்னாலும், அந்த பசங்கள தப்பு செய்ய தூண்டி விட காரணமா இருந்தது யாரு? அந்த பஸ் டிரைவர்தான? அது என்னங்க கவர்மெண்ட் டிரைவர்னா அவ்வெளவு பெரிய ஆளுங்களா? நான் எல்லா டிரைவரை பத்தியும் சொல்லலிங்க, ஒன்னு ரெண்டு பேர் இப்படித்தான் இருக்குறாங்க, இதுவே பஸ் ஓடிட்டு இருக்கும் போது கல்லை வீசி இருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும், டிரைவரு கண்ட்ரோல் உட்டு எத்தனையோ உயிர்பலி ஆகி இருக்கும்ல?
டாக்டர்களுக்கு அப்புறம், மனுசங்க உயிரை காப்பாத்துற தொழில்ல இருக்குறவங்க டிரைவருங்க தான். உங்கள நம்பித்தான் எத்தனையோ பேரு வீட்டுல அப்பா,அம்மா, பொண்டாட்டி புள்ளங்களை விட்டுட்டு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருக்குறாங்க.

அதனால எல்லா டிரைவர்களையும் பார்த்து நிதானமா எல்லாருக்கும் வழி விட்டு ஓட்டுங்கன்னு கேட்டுக்குறேங்க, அரசாங்க வேலை வேண்ணா நிரந்தரமா இருக்கலாம், ஆனா எந்த மனித உயிரும் நிரந்தரம் இல்லைங்க.

Thursday, September 16, 2010

சத்தியமா இந்த லாஜிக் புரியலைங்க!

சத்தியமா இந்த லாஜிக் புரியலைங்க, உங்களுக்காவது புரியுதுங்களா?



நானும் பஸ்ல போகும்போது எல்லாம் பார்க்குறேங்க, அது டவுன் பஸ் ஆகட்டும் இல்ல மப்சல் வண்டியாகட்டும், கடைசி படிக்கட்டுக்கு முன்னாடி இருக்கற சீட்டு முதியோர் அல்லது உடல் ஊனமுற்றோருக்காகன்னு எழுதி இருக்கும், ஆனா அந்த சீட்டை பார்த்தீங்கன்னா பஸ்ஸோட பின் சக்கரத்துக்கு மேலே இருக்கும், அதனால பஸ்சுக்கு உள்ளே சின்ன படி மாதிரி இருக்கும், அந்த சீட்டு மேல ஏறி உட்காரணும்னா அந்த படி மாதிரி இருக்கரதுக்கு மேல ஏறி போகனும், அதிலயும் சில பஸ்ஸில அதுக்கு முன்னாடி இருக்கர சீட் ரொம்ப நெருக்கமா வேற இருக்கும்,  இதுல என் டவுட் என்னன்னா ஒரு முதியவரே அல்லது உடல் ஊனமுற்றவரோ இந்த சீட்டுல எப்படி உட்காருவாங்க, அவங்க சரியா நடக்க முடியாதவங்களா கூட இருக்கலாமில்ல, அல்லது கால் சரியா வராதவங்களா கூட இருக்கலாம், பொதுவா இந்த சீட்டுல வயசானவங்க யாரும் உட்காருவதில்லை மத்தவங்கதான் உட்காரராங்க, இதுக்கு பதிலா கடைசில இருக்கர கண்டக்டர் சீட்டையே கொடுக்கலாம், மப்சல் வண்டில கண்டக்டர் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல உட்கார்ரதைத்தான் விரும்பராரு,




இதுக்கு அரசாங்கம்தான் ஏதாவது பண்ணனும், முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள்னு இருந்ததை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைனு மாத்திட்டாங்க, அப்படியே அவங்க அந்த சீட்டுல எப்படி உட்காருவாங்கன்னும் எழுதி வைச்சுட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்.