Friday, October 22, 2010

வாடா படம் - Get Ready Folks





எனக்கு சுந்தர். சி படம்னா ரொம்ப பிடிக்கும், ஏன்னா அவரு படம் எல்லாமே பயங்கர மொக்கையா இருக்கும், எல்லா மொக்க படத்துக்கும் ரொம்ப சீரியஸ்ஸா நடிச்சிருப்பாரு, இந்த படத்த பத்தி சொல்லனும்னா இந்த படம்தான் அவரு நடிச்சதுலயே மிகச் சிறந்த மொக்க படம்னு சொல்லலாம், ஒரு விதத்துல இளைய தளபதியும் சுந்தர் சியும் ஒண்ணுங்க, படத்துக்கு படம் ஹீரோயின மட்டும்தான் மாத்துறாங்க, கதைய மாத்துறதே இல்லை, நம்ம பதிவுலகத்துல சுந்தர். சிய சூப்பர் பாக்கு தல அப்படின்னு கூப்பிடறாங்க, எனக்கு என்னவோ அது பான்பராக் தல மாதிரிதான் தெரியுது, 

படத்தோட கதைய பத்தி சொல்லிடறேன், பயப்படாதீங்க, சின்னதுதான், ஒரு 2 வரி இருக்கும், நம்ம சுந்தர்.சி, தஞ்சாவூர்ல கலெக்டரா இருக்காரு, பில் கலெக்டர் இல்லைங்க, மாவட்ட கலெக்டர்தான், அப்புறம் தஞ்சாவூருக்கு வர்ற கவெர்னர் சுட்டு கொல்லப்படுறாரு, பழி சுந்தர்.சி மேல விழுது, அதுல இருந்து தலைவர் எப்படி தப்பிக்குறாருங்கறது தான் கதை. 


சுந்தர்.சிய பத்தி சொல்லிட்டதால, அடுத்த இடத்துல இருக்குர கதாநாயகி செரில் பிரிண்டேவ பார்ப்போம், சும்மா சொல்லக் கூடாது, வாங்கின காசுக்கு மேலேயே காட்டியிருக்காங்க, சத்தியமா நான் நடிப்ப சொல்லலிங்க, நான் பார்த்ததுலயே கதாநாயகி கூட டபுள் மீனிங் பேசறது இந்த படத்துலதான் அதிகம், குடும்பம், கொழந்த, குட்டியோட போய் படம் பார்த்தீங்க, கண்டிப்பா டைவர்ஸ்தான், டைவர்ஸ்ஸ உங்க கொழந்தைகளே அப்ளை பண்ணிரும், படத்துக்கு ஏ சர்டிபிகேட்தான் குடுத்திருக்காங்க.


விவேக்க பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு, வெண்ணிற ஆடை மூர்த்தி எல்லாம் இனிமேல் விவேக்கிட்ட பிச்சைதான் எடுக்கணும், உதாரணமா ஒரு சீன் சொல்றேன், கதாநாயகிய கரெக்ட் பண்ண, விவேக்குக்கு நண்பர்கள் குழு ஒரு ஐடியா குடுக்குறாங்க, அது என்னன்னா விவேக் டிரஸ்செல்லாம் கழட்டிட்டு ஒரு துண்டை மட்டும் கட்டிக்கனுமாம், கதாநாயகி வரும் போது எதிர்ல போய் டிரஸ்ஸ அவுத்திரணுமாம், அதே மாதிரி விவேக் போய் கதாநாயகி எதிர்ல நிக்கிறார், அப்புறம் என்ன ஆச்சின்னு தெரிஞ்சுக்கணும்னா படத்த போய் பாருங்க, (பின்குறிப்பு : நான் மட்டும் கஷ்ட்டப்பட்டேன்ல)

இசை D.இமான், பேசாம இசை எமன்னு இவருக்கு பட்டமே குடுத்திரலாம், சும்மா அடிக்கிற அடியில தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிஞ்சு தொங்குதுங்க, படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும், காதுல புகையும் வருது, கூடவே குய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு சவுண்டும் கேட்குதுங்க, அதுவும் பைட் சீன்ல எல்லாம் ணங்,ணங்குன்னு ஒரு மியூசிக் கொடுக்குறாரு, பாருங்க, யாரோ நெஞ்சுல ஏறி உட்காந்து கும்மு, கும்முன்னு கும்முறமாதிரி இருக்கு, சுந்தர்.சிக்கு பேக்ரவுண்ட் மியூசிக், அக்கினி குஞ்சு ஒன்னு கண்டேன்னு பாரதியார் பாட்ட போட்டிருக்காங்க, டைட்டில் கார்டுல பாடல்கள்னு போட்டு மகாகவி சுப்பிரமணி பாரதியாருன்னு வேற போடுராங்க, கொடுமைடா சாமி, நல்லவேளை அவரு செத்து போயிட்டாரு.
என்னடி ராக்கம்மான்னு ரீமிக்ஸ் பாட்டு வேற ஒண்ணு இருக்கு, அதுல நம்ம குஷ்பு வும் வந்து ஒரு குத்தாட்டம் போட்டுட்டு போறாங்க.

புருஷனும், பொண்டாட்டியும் பண்ர அழிச்சாட்டியம் தாங்க முடியலிங்க, அந்த அம்மா, கருத்து சொல்றேன், கழகத்துக்கு போறேன் அப்படின்னு போற எடத்தில எல்லாம் ஏழரைய கூட்டிக்கிட்டு இருக்குது, புருஷங்கார்ரு, படத்துல நடிக்கிறேன், பாட்டு பாடறேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காரு, சுந்தர்.சி சார ஒண்ணே ஒண்ணுமட்டும் கேட்டுக்குறேங்க, பேசாம நீங்க கழகத்துல சேர்ந்திருங்க, ஜே.கே. ரித்திஸ் சாருக்கு அப்புறம் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வரக்கூடிய தகுதி உங்களுக்கு மட்டும்தான் இருக்குதுங்க, கரும சண்டாளம்டா சாமி, 


இந்த படத்துக்கு வாடா அப்படின்னு ஏன் டைட்டில் வச்சிருக்காங்க தெரியுமா, கிளைமேக்ஸ் பைட்டுல வில்லன பார்த்து சுந்தர்.சி, வாடா, வாடான்னு 3 தடவை கூப்பிடுவாரு, அப்படி கூப்பிட்டதுக்கு வில்லன் டென்ஷன் ஆகி சுந்தர்.சிய அடி, அடின்னு அடிச்சிருவாரு, இப்ப வாடான்னு சொல்லுடா அப்படின்னு வில்லன் சொன்னதும், நம்ம ஹீரோ கண்ண மூடி பழசை எல்லாம் ஞாபகத்துக்குக்கு கொண்டு வந்து வில்லனை அடிச்சு போடுவாருங்க, இதுதான் வாடா டைட்டிலோட கதைங்க.


எத்தனையோ படம் பார்த்தவங்க எல்லாம் நல்லாயிருக்காங்க, இந்த ஒரு படத்த பார்த்துட்டு நான் படற அவஸ்தை அய்யெய்யெய்யோஓஓஓ

7 comments:

  1. ராம்ஜி_யாஹூ said...
    thanks

    Me too Ramji Sir

    ReplyDelete
  2. எவ்வளவோ பேரை காப்பத்திருக்கீங்க. நீங்க ரொம்ப நல்லவரு..

    ReplyDelete
  3. ரொம்ப லேட்டா எழுதியிருக்கீங்க... பேட் உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  4. bandhu said...
    எவ்வளவோ பேரை காப்பத்திருக்கீங்க. நீங்க ரொம்ப நல்லவரு..

    என்ன வச்சி கமெடி ஒண்ணும் பண்ணலையே, ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  5. philosophy prabhakaran said...

    நான் லேட்டாதான் படம் பார்த்தேன், என்ன இருந்தாலும் தலைவர் படம் அல்லவா?

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!